ஆட்டோமொபைல்
டொயோட்டா உற்பத்தி ஆலை பணிகள் நிறுத்தம்
டொயோட்டா நிறுவனத்தின் பிடாடி உற்பத்தி ஆலையின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கர்நாடக மாநிலத்தின் பிடாடி பகுதியில் உள்ள உற்பத்தி ஆலை பணிகள் ஜூலை 14 முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யும் நோக்கில் அம்மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவின் படி ஆலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் கார்ப்பரேட் மற்றும் வட்டார அலுவல் அதிகாரிகள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடி பணியாற்றுவர். மேலும் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் டொயோட்டா நிறுவனம் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கி உள்ளது.
முன்னதாக மார்ச் மாதத்தில் நாடுதழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்பே பிடாடி ஆலை பணிகள் நிறுத்தப்பட்டன. ஊழியர்களின் பாதுகாப்பு கருதி ஆலை பணிகள் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.