ஆட்டோமொபைல்
இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 மாடல் இந்திய சந்தையில் இதுவரை சுமார் 40,000-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி அறிமுகமான மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 இதுவரை 40,503 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.
இவற்றில் பெட்ரோல் வேரியண்ட் மட்டும் 72 சதவீதமும், டீசல் வேரியண்ட் 28 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 2,132 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியன்டகளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
இத்துடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. எக்ஸ்.யு.வி. 300 காரில் எல்.இ.டி. ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் இக்னிஷன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளது.