ஆட்டோமொபைல்
டாடா டியாகோ

சோதனையில் சிக்கிய டாடா டியாகோ

Published On 2019-11-05 11:29 GMT   |   Update On 2019-11-05 11:29 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டியாகோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2020 டியாகோ மாடல் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன் வடிவமைப்பு அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாகி இருக்கும் என தெரிகிறது.

அதன்படி காரின் முன்புறம் கூர்மையான ஹெட்லேம்ப்கள் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புற பம்ப்பர், ஃபாக் லேம்ப் வடிவமைப்பு மாற்றப்பட்டு அல்ட்ராஸ் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. காரின் பின்பற பம்ப்பர்களும் மாற்றப்பட்டு புதிய டெயில் லேம்ப் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

இதன் வீல் வடிவமைப்பில் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஹேட்ச்பேக் மாடலில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் 2020 டிகோர் மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 டாடா டியாகோ மாடலில் பிரத்யேக பெட்ரோல் பவர்டிரெயின் உடன் விற்பனைக்கு வரும் என எதி்ர்பார்க்கப்படுகிறது.



புதிய காரில் தற்சமயம் விற்பனையாகும் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினின் பி.எஸ். 6 வெர்ஷன் செயல்திறன் அளிவில் மாற்றம் இருக்காது.

இந்த என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏ.எம்.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கும். புதிய ஹேட்ச்பேக் மாடலிலும் இதே டிரான்ஸ்மிஷன் எதிர்பார்க்கலாம்.

புகைப்படம் நன்றி: Area of Interest
Tags:    

Similar News