ஆட்டோமொபைல்
கனரக வாகனங்களை ஓட்ட படிப்பு தேவை இல்லை மத்திய அரசு சட்டம் இன்றுமுதல் அமல்
இந்தியாவில் கனரக வாகனங்களை ஓட்ட படிப்பு தேவை இல்லை என்ற மத்திய அரசு சட்டம் இன்றுமுதல் அமலாகி உள்ளது.
கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்கிற விதி அமலில் இருந்து வந்தது. மத்திய அரசின் இந்த மோட்டார் வாகன சட்டத் தால் 8-ம் வகுப்பு வரை படிக்காதவர்கள் கனரக வாகன ஓட்டுனர் உரிமத்தை பெற முடியாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு 8-ம் வகுப்பு படிப்பு தேவையில்லை என்று மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் தமிழகத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு இருந்து வந்த கல்வி தகுதி தடை நீங்கி உள்ளது.
இலகு ரக வாகன உரிமம் பெற்று கொண்டு பின்னர் 20 வயதை எட்டி இருந்தால் மட்டுமே கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடியும். கனரக வாகன ஓட்டுனர் உரிமத்துக்கு 8-ம் வகுப்பு வரை படித்திருக்க தேவை இல்லை என்கிற சட்டதிருத்த அறிவிப்பால் டிரைவர்கள் பலர் பயன் பெறுவார்கள்.
டிரைவர்களாக பணிபுரியும் 8-ம் வகுப்பு முடித்திராத டிரைவர்களும் இனி கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற விண்ணபிக்கலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.