ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-08.08.25

Published On 2025-08-08 06:00 IST   |   Update On 2025-08-08 06:00:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

ரிஷபம்

கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும் நாள். புதிய உத்தியோகத்திற்காக எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்துமுடிப்பீர்கள்.

மிதுனம்

பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் ஏற்படும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

கடகம்

தகராறு செய்தவர்கள் தானாக விலகும் நாள். தடைகள் அகலும். தன வரவு திருப்தி தரும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும்.

சிம்மம்

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். பெரியவர்களின் யோசனையால் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னி

பணத்தேவைகள் உட னுக்குடன் பூர்த்தியாகும் நாள். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

துலாம்

முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். கூடப்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்

மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். சேமிப்பு உயரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். பாராட்டுகளை பெறுவீர்கள். பயணம் பலன் தரும்.

தனுசு

யோகமான நாள். அதிகாலையிலேயே வரவு வந்து சேரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

மகரம்

விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீண் விவகாரங்கள் வீடு தேடி வரலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை சமாளிக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

கும்பம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். பண வரவு திருப்தி தரும்.

மீனம்

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். பிரச்சனைகள் தீரும். எண்ணிய காரியங்கள் எளிதில் முடியும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

Tags:    

Similar News