ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-29.08.25

Published On 2025-08-29 05:53 IST   |   Update On 2025-08-29 05:53:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

செவி குளிரும் செய்திகள் வந்துசேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

லட்சியங்கள் நிறைவேறும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் சீராக நடைபெறும்.

மிதுனம்

உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம்.

கடகம்

கனிவாகப்பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். சொந்த பந்தங்களின் வருகை உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புக் கிட்டும்.

சிம்மம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். விலகிச் சென்றவர்கள் வந்திணைவர். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணைவர்.

கன்னி

நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உதிரி வருமானம் உண்டு. வருங்கால நலன் உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புகழ் கூடும். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.

தனுசு

வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளைச் செய்துமுடிப்பீர்கள். உத்தியோக பிரச்சனை அகலும்.

மகரம்

சுப காரிய பேச்சுகள் முடிவாகும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

கும்பம்

வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உடல் நலம் சீராகும்.

மீனம்

எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். எதிர்பாராத பயணங்களால் விரயம் உண்டு. உடல்நலத்தில் அக்கறை தேவை. தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படும்.

Tags:    

Similar News