ராசிபலன்

Today Rasipalan- இன்றைய ராசிபலன் 27.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்

Published On 2025-10-27 05:39 IST   |   Update On 2025-10-27 05:39:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

குறைகள் அகலக் குமரனை வழிபட வேண்டிய நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

ரிஷபம்

நேசம் அதிகரிக்க ஈசனை வழிபட வேண்டிய நாள். பாசம்மிக்கவர்கள் பகையாகலாம். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசியில் கையை விரிக்கலாம். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படும்.

மிதுனம்

கவலைகள் அகலக் கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

கடகம்

யோகமான நாள். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தொலைந்த பொருள் கைக்கு வந்து சேரும். வருமானம் பெருக வழி அமைத்துக் கொள்வீர்கள்.

சிம்மம்

சுகங்கள் வந்து சேர சுப்ரமணியரை வழிபட வேண்டிய நாள். தனவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடைபெறும். கடன் பிரச்சனைகள் அகலும்.

கன்னி

யோகமான நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொலைதூரத்தில் இருந்துவரும் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

துலாம்

சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

விருச்சிகம்

வளர்சசி கூட வடிவேலனை வழிபட வேண்டிய நாள். எதிர்பார்த்த வரவு உண்டு. நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். முயற்சியில் வெற்றி கிட்டும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

தனுசு

செல்வநிலை உயர்ந்து சிந்தை மகிழும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். மருத்துவச் செலவு குறையும். வருமானம் திருப்தி தரும்.

மகரம்

பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். பிற இனத்தாரின் ஒத்துழைப்போடு காரியங்களைச் செய்வீர்கள். விலகியிருந்த உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.

கும்பம்

சந்தோஷம் அதிகரிக்க சண்முகநாதரை வழிபட வேண்டிய நாள். எடுத்த முயற்சி எளிதில் கைகூடும். வரன்கள் வாயில் தேடி வரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும்.

மீனம்

வருமானம் அதிகரிக்க வழியமைத்துக் கொள்ளும் நாள். வளர்ச்சி கூடும்.குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில் சீராக நடைபெறும்.

Tags:    

Similar News