ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-26.09.25

Published On 2025-09-26 05:46 IST   |   Update On 2025-09-26 05:46:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவைவிடச் செலவு கூடும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறுகள் ஏற்படும்.

ரிஷபம்

ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

மிதுனம்

திடீர் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.

கடகம்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. திருமண பேச்சுகள் முடிவாகலாம்.

சிம்மம்

வரவு இருமடங்காகும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு உண்டு.

கன்னி

அமைதி கிடைக்க ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும்.

துலாம்

திறமை பளிச்சிடும் நாள். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சிநேகிதர்கள் செல்வநிலை உயர வழிகாட்டுவர்.

விருச்சிகம்

யோகமான நாள். வருமானம் உயரும். புகழ் பெற்றவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவோடு நல்ல காரியம் நடைபெறும். கல்யாண முயற்சி கைகூடும்.

தனுசு

வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். சொத்துகளால் லாபம் உண்டு.

மகரம்

மனமாற்றத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு கைகூடிவரும். வியாபார விருத்தி உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்

உன்னத வாழ்க்கைக்கு அடித்தளம் அமையும் நாள். பொதுவாழ்வில் பாராட்டும் புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம்.

மீனம்

நட்பு பகையாகும் நாள். கடமையில் தொய்வு ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. தொழில் பணியாளர்களிடம் கூடுதல் கவனம் தேவை.

Tags:    

Similar News