ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-24.08.25

Published On 2025-08-24 05:50 IST   |   Update On 2025-08-24 05:50:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷபம்

மனக்குழப்பம் அகலும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

மிதுனம்

பணவரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். வாகனம் வாங்கும் யோகமுண்டு.

கடகம்

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்கும் திட்டம் நிறைவேறும்.

கன்னி

நினைத்தது நிறைவேறும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

துலாம்

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வீடு மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர்கள்.

விருச்சிகம்

புகழ் கூடும் நாள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து செயல்படுவர். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

தனுசு

யோகமான நாள். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இலாகா மாறுதல் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

மகரம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது ஒருகணம் சிந்திப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்

சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். புதிய தொழில்தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்பால் குடும்பப் பிரச்சினை தீரும்.

மீனம்

மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

Tags:    

Similar News