ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-22.08.25

Published On 2025-08-22 05:53 IST   |   Update On 2025-08-22 05:53:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

முன்னேற்றம் கூட முன்னோர்களை வழிபட வேண்டிய நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம். சுப காரியப் பேச்சுகள் முடிவாகும்.

ரிஷபம்

லாபகரமான நாள். தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

மிதுனம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

கடகம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

சிம்மம்

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி

போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பொருளாதார நிலை உயரும்.

தனுசு

தேவைகள் பூர்த்தியாக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டிய நாள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.

மகரம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி மாறும். உத்தியோகத்தில் உயர்வு பற்றிய தகவல் வரலாம். மாலைப் பயணம் மகிழ்ச்சி தரும்.

கும்பம்

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். உயர்ந்த மனிதர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

மீனம்

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையில் வரலாம்.

Tags:    

Similar News