Today Rasipalan- இன்றைய ராசிபலன் 19.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு வேலைப்பளு கூடும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்துசேரும் நாள். வியாபார முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். வேலைப்பளு கூடும். உறவினர்களால் தொல்லை உண்டு. புதியவர்களை நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம்.
மிதுனம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
கடகம்
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.
துலாம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள்.
விருச்சிகம்
முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வர்.
தனுசு
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பயணம் பலன் தரும்.
மகரம்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். வருமானம் உயரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வர்.
கும்பம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும்.
மீனம்
அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வி.ஐ.பி. க்களின் ஒத்துழைப்பால் விரும்பிய காரியம் நடைபெறும்.