Today Rasipalan- இன்றைய ராசிபலன் 12.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோகமான நாள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும்.
ரிஷபம்
துணிச்சலோடு செயல்படும் நாள். செய்தொழில் சிறப்பாக அமையும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோக மாற்றம்பற்றிச் சிந்திப்பீர்கள்.
மிதுனம்
நம்பிக்கைக்கு உரியவர்கள் நாடி வந்து உதவும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
வருமானம் திருப்தி தரும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.
சிம்மம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். தொழில் தொடர்பாக தொலை தூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.
கன்னி
தேவைகள் பூர்த்தியாகித் திருப்தி காணும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
துலாம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
விருச்சிகம்
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். சில காரியங்களை எளிதில் செய்து முடிக்கவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை.
தனுசு
விடாமுயற்சி வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. அயல்நாட்டிலிருந்து ஆதாயம் திருப்தி தரும் தகவல் வரலாம்.
மகரம்
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்வர். மறைமுக எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும்.
கும்பம்
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உத்தியோகத்தில் உயர்வும், ஊதிய உயர்வும் வந்து சேரலாம். பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
மீனம்
முன்னேற்றம் கூடும் நாள். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்து கொள்வர். வரவு உண்டு.