Today Rasipalan- இன்றைய ராசிபலன் 10.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் கூடும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். குடும்ப பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.
ரிஷபம்
செல்வாக்கு உயரும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறுவது பற்றி முடிவெடுப்பீர்கள்.
மிதுனம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.
கடகம்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
சிம்மம்
வரவும் செலவும் சமமாகும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். எப்படி நடக்கும் என்று நினைத்த காரியமொன்று நல்லபடியாக நடக்கும். ஆன்மிகப் பயணம் உண்டு.
கன்னி
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் பெருமைகள் ஏற்படும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
துலாம்
அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் தோன்றும். பிறரை விமர்சிப்பதால் உறவில் விரிசல் ஏற்படலாம்.
விருச்சிகம்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். உடல்நலம் சீராகும். தடைபட்ட காரியம் இன்று தானாக நடைபெறும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.
தனுசு
காலையில் கலகலப்பும், மதியத்திற்கு மேல் சலசலப்பும் ஏற்படும் நாள். கோபத்தில் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள்.
மகரம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
கும்பம்
முன்னேற்றம் கூடும் நாள். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு.
மீனம்
பகை நட்பாகும் நாள். மறதியால் விட்டுப்போன காரிய மொன்றைச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.