ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 08.09.2025

Published On 2025-09-08 07:29 IST   |   Update On 2025-09-08 07:29:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். புனிதப் பயணங்கள் செல்லும் முயற்சி கைகூடும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

திறமைகள் பளிச்சிடும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சனைகள் அகலும். வரவேண்டிய பணத்தை வசூலிக்க முற்படுவீர்கள்.

மிதுனம்

எதிர்ப்புகளைச் சமாளித்து ஏற்றம் காண வேண்டிய நாள். வியாபாரம் தொழில் சம்மந்தமாக முக்கியப்புள்ளிகளைச் சந்திக்க நேரிடும். தேகநலன் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

கடகம்

குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது.

சிம்மம்

அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தரும்.

கன்னி

கூட்டாளிகளால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். மண், மனை வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

துலாம்

கல்யாண முயற்சி கைகூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உற்றார், உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

விருச்சிகம்

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் தொடர்பாக எடுத்த முடிவிற்கு உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர்.

தனுசு

பொன்னான நாள். நண்பர்களின் சந்திப்பால் நல்ல காரியம் நடைபெறும். கருத்து வேறுபாடுகள் அகலும். சகோதரர் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர்.

மகரம்

நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். தொலைபேசி வழியில் தொழில் வளர்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும்.

கும்பம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் உயரும். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

மீனம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை இழுபறி நிலையில் நீடிக்கலாம். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

Tags:    

Similar News