ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 7.10.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு உயரும் நாள்

Published On 2025-10-07 07:36 IST   |   Update On 2025-10-07 07:36:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

முன்னேற்றம் கூடும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. தேக நலனில் அக்கறை செலுத்தவும். சில நேரங்களில் நீங்கள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

ரிஷபம்

யோகமான நாள். பிரியமானவர்களோடு ஏற்பட்ட பிரச்சனை தீரும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. குடும்ப அமைதிக்காக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்

நெருக்கடி நிலை அகலும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

கடகம்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். சேமிப்பு கரையாதிருக்க சிக்கனத்தை கடைப்பிடிப்பீர்கள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

சிம்மம்

கவலைகள் தீரக் கடவுள் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டிய நாள். கடன் சுமை அதிகரிக்கும். உறவினர் வழியில் மனக்கசப்பு உருவாகும். வரவைவிடச் செலவு கூடும்.

கன்னி

தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். வியாபார விருத்திக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் நீடிப்பதா வேண்டாமா என்ற சிந்தனை அதிகரிக்கும்.

துலாம்

எதிரிகளின் பலம் கூடும் நாள். எல்லோரையும் அனுசரித்துச்செல்வது நல்லது. நேற்று எடுத்த முடிவை இன்று மாற்றிக்கொள்வீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை.

விருச்சிகம்

வாயிலைத்தேடி வருமானம் வந்து சேரும் நாள். வழிபாடுகளில் மனதை செலுத்துவீர்கள். நேற்றைய கனவு இன்று பலிதமாகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

தனுசு

செல்வாக்கு உயரும் நாள். வரவு வந்தாலும் செலவு கூடுதலாகும். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களில் தாமதம் ஏற்படும்.

மகரம்

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பணத்திற்காக செய்திருந்த ஏற்பாடுகள் பலன் தரும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் உத்தியோக முயற்சி கைகூடும்.

கும்பம்

நிம்மதி குறையும் நாள். வரவைவிடச் செலவு கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொல்லை உண்டு. வீடு கட்ட அல்லது வாங்க செய்த ஏற்பாடு தாமதப்படும்.

மீனம்

எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சி கூடும். பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள்.

Tags:    

Similar News