ராசிபலன்
null

Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 26.08.2025

Published On 2025-08-26 07:43 IST   |   Update On 2025-08-26 15:20:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும்.

ரிஷபம்

யோகமான நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். திருமணப் பேச்சுகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

மிதுனம்

பக்கத்தில் உள்ளவர்களின் பாசமழையில் நனையும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களை கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

கடகம்

புதிய பாதை புலப்படும் நாள். பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் குதூகலப் பயணங்கள் உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திப்பீர்கள்.

சிம்மம்

வளர்ச்சி கூடும் நாள். வருமானத்தடை அகலும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

கன்னி

தனவரவு திருப்தி தரும் நாள். மனதில். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள். வாகனப் பழுதுகளால் விரயம் ஏற்படும். உறவினர்கள் கேட்ட உதவிகளைச் செய்வர்.

துலாம்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் உருவாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

விருச்சிகம்

தொட்டது துலங்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர்.

தனுசு

சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தேக ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும். தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

மகரம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆதாயமற்ற அலைச்சல்களை சந்திக்க நேரிடும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும்.

கும்பம்

பிறரை விமர்ச்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும் நாள். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். வரவு வருவதற்கு முன்னே செலவு காத்திருக்கும்.

மீனம்

புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப் பணி தொடரும் ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும்.

Tags:    

Similar News