ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 25.09.2025

Published On 2025-09-25 07:56 IST   |   Update On 2025-09-25 07:56:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

ரிஷபம்

எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும்.

மிதுனம்

வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். கைமாற்றாக கொடுத்த தொகை வந்து சேரும். பிரபலமானவர்களின் நட்பால் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

கடகம்

கனவுகள் நனவாகும் நாள். கட்டிடம் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

சிம்மம்

அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

கன்னி

யோகமான நாள். அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வரலாம். வியாபார வளர்ச்சி உண்டு. புது முயற்சியில் வெற்றி கிட்டும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

துலாம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். திருமண முயற்சி கைகூடும்.

விருச்சிகம்

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள்.

தனுசு

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் உண்டு.

மகரம்

பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு உண்டு. புது முயற்சிக்கு கைகொடுத்து உதவ நண்பர்கள் முன்வருவர். தொழில போட்டிகள் அகலும்.

கும்பம்

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பண வரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் பணி உயர்வு கிடைக்கும்.

மீனம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் விரோத மனப்பான்மையால் நடைபெற வேண்டிய காரியம் தாமதப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாம்.

Tags:    

Similar News