ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 24.09.2025

Published On 2025-09-24 07:35 IST   |   Update On 2025-09-24 07:35:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வெளியூர் பயணங்களை செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். பணவரவு திருப்தியாக இருக்கும். தொழில் வளர்ச்சி உண்டு.

மிதுனம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உடல் நலனில் அக்கறை காட்டும் சூழ்நிலை அமையும். விரயங்களால் கலக்கமடைவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சனை உண்டு.

கடகம்

முட்டுக்கட்டைகள் அகன்று முன்னேற்றம் கூடும் நாள். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.

சிம்மம்

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். சந்தோஷமான அனுபவங்கள் மூலம் மனதில் உற்சாகமும், தெம்பும் கூடும்.

கன்னி

காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.

துலாம்

செல்வநிலை உயரும் நாள். பயணங்கள் செல்ல திட்டமிட்டுப் பின்னர் அதை மாற்றம் செய்வீர்கள். உங்கள் சொற்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு உண்டாகும்.

விருச்சிகம்

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் வெற்றி நடைபோடும்.

தனுசு

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். அதிக செலவில் முடிக்க நினைத்த வேலையொன்றை குறைந்த செலவில் முடிப்பீர்கள்.

மகரம்

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். வியாபாரத்தில் உள்ள மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் அகலும்.

கும்பம்

கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

மீனம்

இறை வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

Tags:    

Similar News