ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 21.10.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்

Published On 2025-10-21 07:53 IST   |   Update On 2025-10-21 07:53:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப்புள்ளிகள் இல்லம் தேடி வருவர். சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

ரிஷபம்

சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாள். கண்டும் காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கொடுக்கல் வாங்கல்கள் திருப்தி தரும்.

மிதுனம்

மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிய புதிய சிந்தனைகள் மேலோங்கும். பொருளாதார நலன்கருதி வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கடகம்

பற்றாக்குறை அகலும் நாள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம்.

சிம்மம்

முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

கன்னி

சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். கல்யாண முயற்சி கைகூடும்.

துலாம்

வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும்.

விருச்சிகம்

பெரியோர்களின் ஆசியால் பெருமைகள் சேரும் நாள். வருமானம் திருப்தி தரும். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

தனுசு

வரவு திருப்தி தரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். பயணங்கள் பலன்தருவதாக அமையும்.

மகரம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணயப்பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. உத்தியோக மாற்றம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

கும்பம்

மனச்சுமை அகலும் நாள். வீட்டைச் சீரமைப்பதில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். புதிதாகத் தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.

மீனம்

ஆதாயத்தை விட விரயம் கூடும் நாள். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகளைச்சமாளிக்கப் பிறரிடம் கைமாத்து வாங்கக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

Tags:    

Similar News