Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 20.08.2025... மகிழ்ச்சி கூடும் நாள்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும்.
ரிஷபம்
போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர்.
மிதுனம்
விடிகாலையிலேயே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வரலாம்.
கடகம்
நட்பு பகையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நாள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களை சந்திக்க சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிவாலய வழிபாட்டால் சிறப்புகள் வந்து சேரும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். பயணங்கள் பலன் தரும். ஆரோக்கியம் சீராகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
கன்னி
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
துலாம்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். எந்த காரியத்தையும் எடுத்தோம். முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
விருச்சிகம்
இன்னல்கள் தீர இறைவனைப் பணிய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
தனுசு
மகிழ்ச்சி கூடும் நாள். மங்கலச் செய்தி வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களும் ஒத்துழைப்புத் தருவர்.
மகரம்
புதிய பாதை புலப்படும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் நடைபெறும். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.
கும்பம்
சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். எடுத்த காரியத்தை முடிக்க அதிக அலைச்சல் ஏற்படலாம்.
மீனம்
நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். அன்னிய தேச அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும்.