ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 19.09.2025

Published On 2025-09-19 07:39 IST   |   Update On 2025-09-19 07:39:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். ஆரோக்கியம் சீராகும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.

ரிஷபம்

வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடப்பிறந்தவர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்தபடியே தொழிலில் லாபம் கிடைக்கும்.

மிதுனம்

சான்றோர்களை சந்தித்து மகிழும் நாள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் யோகமுண்டு.

கடகம்

மனக்குழப்பம் அகலும் நாள். பயணம் பலன்தரும் விதம் அமையும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சகோதரர் வழியில் இனிய செய்தி கிடைக்கும்.

சிம்மம்

வரவைவிட செலவு கூடும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

கன்னி

மகிழ்ச்சி கூடும் நாள். மனத்தளவில் நினைத்த காரியம் ஒன்றை செய்துமுடிப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். முன்னோர் வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் அகலும்.

துலாம்

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். கல்யாண கனவுகள் நனவாகும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

விருச்சிகம்

சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

தனுசு

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றம் கிடைக்கலாம்.

மகரம்

யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வீண் விரயங்கள் உண்டு. உறவு பகையாகலாம்.

கும்பம்

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நீண்ட நாளைய பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

மீனம்

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.

Tags:    

Similar News