Today Rasipalan: இன்றைய ராசிபலன் 15.10.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தடைகள் அகல தைரியமாக முடிவெடுக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் உங்கள் முன்னேற்றம் பற்றி சொல்ல வேண்டாம்.
மிதுனம்
எதிரிகள் விலகும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய தகவல் தருவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
கடகம்
ஏக்கங்கள் தீர்ந்து இனிய பலன் கிடைக்கும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.
சிம்மம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பம்பரமாக சுழன்று பணிபுரிந்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கன்னி
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வரவு திருப்தி தரும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும்.
துலாம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.
விருச்சிகம்
வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமையுண்டு.
தனுசு
கூடயிருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகும் நாள். மறதி அதிகரிக்கும். மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டு முறை அலைய நேரிடலாம்.
மகரம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பர். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம்.
கும்பம்
வளர்ச்சி கூடும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.
மீனம்
கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் வளர்ச்சிக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.