ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 09.09.2025

Published On 2025-09-09 07:57 IST   |   Update On 2025-09-09 07:57:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். இனிய நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தினர்களுடன் குதூகலப் பயணம் உண்டு. திட்டமிட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.

ரிஷபம்

நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. வீடு மாற்றம், வரலாம். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிகப்பொறுப்புகளை வழங்குவர்.

மிதுனம்

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்டநாளாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம்.

கடகம்

வளர்ச்சி கூடும் நாள். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

சிம்மம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே வரலாம்.

கன்னி

வெற்றிச்செய்திகள் வீடு வந்துசேரும் நாள். உற்றார், உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.

துலாம்

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். வரன்கள் வாயில் தேடி வரும்.

விருச்சிகம்

யோகமான நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றிதரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.

தனுசு

வியக்கும் தகவல் வீடு வந்துசேரும் நாள். சகோதர ஒற்றுமை பலப்படும். அலுவலகப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

மகரம்

பிரபலஸ்தர்களைச் சந்தித்து மகிழும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்க முன்வருவீர்கள். அஞ்சல் வழியில் அனுகூலத் தகவல் உண்டு.

கும்பம்

முன்னேற்றம் கூட முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

மீனம்

நாசூக்காகப் பேசி நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும். பணவரவு உண்டு.

Tags:    

Similar News