ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 03.09.2025

Published On 2025-09-03 07:44 IST   |   Update On 2025-09-03 07:44:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

ரிஷபம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.

மிதுனம்

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பழகிய சிலருக்காக கணிசமான பணத்தை செலவிடும் சூழ்நிலை உண்டு

கடகம்

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிம்மம்

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானே தேடிவரும்.

கன்னி

முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் சீராக நடைபெறும்.

துலாம்

வருமானம் உயரும் நாள். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக வரும் அழைப்புகள் ஆச்சரியமூட்டும்.

விருச்சிகம்

மகிழ்ச்சி கூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உறவினர் வழிப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். உடல் நலம் சீராகும். உத்தியோக உயர்வு உண்டு.

தனுசு

தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியவேண்டிய நாள். தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

மகரம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும்.

கும்பம்

நண்பர்களின் சந்திப்பால் நன்மைகள் ஏற்படும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள்.

மீனம்

சச்சரவுகள் அகலும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நெடுநாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

Tags:    

Similar News