அரசியல் ஆர்வம் மிகுந்த விருச்சிக ராசியினரே
பங்குனி மாதத்தில் உங்களின் ராசி அதிபதி செவ்வாய் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய (பங்குனி 19 (2.4.2026) ஸ்தானத்தில் உள்ள சனியுடன சேரப் போகிறார்.இதுவரை உலகுக்கு தெரியாமல் இருந்து வந்த உங்களுடைய திறமைகள் அனைவருக்கும் தெரியவரும். செயல்திறனில் மாற்றம் ஏற்படும். சுப நிகழ்வுகள் சுப செலவுகளையும் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். பல வழிகளில் பணம் வந்து மனதையும் பையையும் நிரப்பும்.கஷ்டங்கள், கவலைகள் நீங்கி பொருளாதார நிலைமை சீராகும்.வீடு, நிலம், வாகனம் போன்ற சுப விரைய செலவுகள் உண்டாகும்.
வேலையில் லகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். உற்சாகமாக எதையும் கற்றுக் கொள்வீர்கள். குலதெய்வத்தின் கருணை முழுவதுமாக கிடைக்கும்.பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் காதல் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு இப்போது சாதகமாக பலன் தரும்.முன்னோர் வழி சொத்தில் இருந்த வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். நடப்பதெல்லாம் கனவா? என்று நினைக்க தோன்றும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிறர் பணம், வரதட்சணை பணம், எதிர்பாராத தன லாபம், லாட்டரி, புதையல், உயில். ஆயுள் காப்பீடு போன்ற வகையில் கிடைக்கும். உங்களின் திறமையின் மீது நீங்கள் கொண்ட வைராக்கியம், பிடிவாத குணம், ஆளுமை திறன் உங்களின் தொழில், உத்தியோகம் மூலம் உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும். உங்களின் முன்னேற்றத்தை தடுத்தவர்கள் காணாமல் போவார்கள்.
தொழில் அதிபர்களின் நீண்ட நாள் கனவான ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாய்ப்பு தேடி வரும். ஏற்கனவே வெளிநாட்டு வணிகம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். இயன்ற வரை பெரிய கடன் வாங்கி விவசாயம் செய்தலை தவிர்க்க வேண்டும். உங்களின் சொந்த வீடு, வாகன கனவை நிறைவேற்ற ஏற்ற காலம்.
இந்த மாதம் கடனும் விரையமும் உங்களுக்கு வரப்போவது உறுதியாகி விட்டது. கடன் வாங்கி சுப விரயமாக மாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. தாய், தந்தையின் ஆரோக்கியம் சீராகும். உற்றார், உற வினர்களின் அன்பும் ஆதரவும் உங்களை மகிழ்விக்கும். மேலும் போட்டித் தேர்வு எழுதும் விருச்சிக ராசி குழந்தைகள் மாநில, மாவட்ட , பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெறுவது உறுதி.கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பால் பூர்வீக தொழிலை பிரிக்க நேரும். மனதில் சில சில சங்கடங்கள் இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.
குருமங்கள யோகம்
விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான் 2,5ம் அதிபதியான குருவை தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார் இது குருமங்கள யோகமாக பலன் தரும்.மிகப்பெரிய வாழ்வியல் மாற்றங்களைத் சந்திப்பீர்கள்.பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும்.ஆன்ம பலம் பெருகும். புத்திரப் பிராப்த்தத்தில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும். பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல திருப்பு முளையான சம்பவங்கள் நடைபெறும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும்.குல தெய்வம் தொடர்பான வேண்டுதல்கள் பலிதமாகும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு. விட்டு விலகிய சொந்தங்கள் உங்களை புரிந்து கொண்டு நாடி வந்து பேசுவார்கள்.மனக்கவலைகள் நீங்கும். இழுபறி நிலை மாறி மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும்.வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது.பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள்.குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.
பொருளாதாரம்
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இலக்குகளை நிர்ணயித்து வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். வாழ்க்கைத் தரம் உயரும்.தன வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாழ்க்கைத் துணையின் வருமானம் இரட்டிப்பாகும்.பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கேட்ட இடத்திலும் கேட்காத இடத்திலும் கூட கடன் கிடைக்கும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க உங்கள் வீட்டு வாசலில் காத்து இருப்பார்கள். தொழில் , திடீர் உயில் சொத்து, லாட்டரி , ரேஸ், பங்குச் சந்தை என அனைத்து வழிகளிலும் பண வரவு உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். அடமான நகைகள் சொத்துக்களை மீட்க கூடிய வகையில் உபரி வருமானம் கிடைக்கும். எவ்வளவு வருமானம் வந்தாலும் கட்டுக்கடங்காத விரயமும் இருக்கும். பணம் வந்த சுவடு இருக்கும் போன சுவடு தெரியாது. தாங்க முடியாத விரயம் மன உளைச்சலை தரும்.
முதலீட்டாளர்கள்
இது வரை ஒரு தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் இன்னொரு தொழில் செய்யும் எண்ணம் வரும். சில்லரை வணிபம் செய்தவர்கள் மொத்த வியாபாரம் செய்வார்கள். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும்.தொழில் போட்டி அதிகமாகும். போட்டியை சமாளிக்க உலகத்தில் எத்தனை குறுக்கு வழி உண்டோ அத்தனையையும் பின்பற்றும் சூழல் ஏற்படும். மூளையை மூலதனமாக்கி தொழில் செய்பவர்களுக்கு நல்ல சிந்தனை என்றால் என்ன? என்று கேட்கும் வகையில் கள்ளத்தனம் மிகும்.கூட்டம் கூடினாலும் கல்லா கலை கட்டாது.அரசின் வரிச் சுமைகாரணமாக குலத் தொழிலைச் செய்து வருபவர்கள் அதிலிருந்து விடுபட்டு வேறு தொழிலுக்கு செல்வார்கள்.வெளியூரில் வேலை பார்ப்பவர்கள். குலத் தொழிலை செய்வதற்காக சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள்
படித்து முடித்தவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலையில் சேர உத்தரவு வரும். பணிச்சுமை அதிகரிப்பால் செயல்பாடுகளில் மந்தத் தன்மை, தயக்கம் இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். தீர்க்க யோசிக்காமல் எடுத்த முடிவு எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சிலருக்கு சிறிய பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் வேகம், விவேகத்தை கடைபிடித்தால் மட்டுமே உங்களை காத்துக் கொள்ள முடியும்.
அரசியல்வாதிகள்
பொது வாழ்க்கையில், மிகப் பெரிய பதவியில் இருப்பவர்கள் கவனமாக காய் நகர்த்த வேண்டும்.அரசு சார்ந்த ஒப்பந்தங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும் அரசு ஒப்பந்தங்களை மீறுவது , அலட்சியம் செய்வது ஆபத்தை ஏற்படுத்தும். மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆக்க பூர்வ பணிகளை செய்து உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள் இழந்த பதவி உங்களை தேடி வரும். அரசியலில் இருப்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முயற்சிக்கலாம்.சனி பகவானின் அருள் இருந்தால் மட்டுமே பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். தசாபுத்திகள் சாதகமான அரசியல் வாதிகள் ஜெயிப்பது உறுதி.
பெண்கள்
பெண்களுக்கு மிக சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். கணவன் மனைவி இடையே சுமூகமான உறவு நீடிக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். குடும்ப ஒற்றுமை'பலப்படும்.பணப் புழக்கத்திற்கு குறைவிருக்காது. பொன், பொருள் சேரும்.உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும் காலம். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம்.
செவ்வாய் சனி சேர்க்கை
விருச்சிக ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பங்குனி 19 (2.4.2026) அன்று சனி செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. குடும்ப வாழ்வில் நாட்டக்குறைவு உருவாகும். வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறி வேறு மத வழிபாடு செய்வார்கள். நிம்மதியான தூக்கம் இருக்காது. பக்கத்து வீட்டுக்காரர்கள், தெருவாசிகளுடன் எதாவது கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். நட்பு பாராட்டும் மனம் இல்லாவிட்டலும் பகையை வளர்க்காமல் இருந்தாலே போதும். சிலர் உண்ண உறங்க நேரமில்லாமல் அலைய நேரும். உறவினர்களால் மதிப்பு, மரியாதை குறையும். மன வெறுப்பால் பூர்வீகத்தை விட்டு வெளியேறி வாழும் எண்ணம் தோன்றும்.தீய பழக்கங்களை மனம் நாடும். சனியின் ஆதிக்கத்தினால் உடல் மெலியும். சனியின் தானியமான எள்ளை சாப்பிட்டால் உடலில் சதைப்பிடிப்பு கூடும். கடினமாக உழைத்து வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.
பரிகாரம்
பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406