கவனம் தேவை!
விடா முயற்சியால் வெற்றியை எட்டிப் பிடிக்கும் சிம்ம ராசியினருக்கு பிறக்கும்சோபகிருது தமிழ் புத்தாண்டு நினைத்ததை நிறைவேற்றக் கூடிய சுப வருடமாக அமைய நல் வாழ்த்துக்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 22ல் குருபகவான் பாக்கிய ஸ்தானம் சென்று பாக்கிய பலன்களை வழங்கவுள்ளார். ஜனவரி 17 முதல் கண்டகச் சனியின் ஆதிக்கத்தை சனி பகவான் வழங்கிக் கொண்டு வருகிறார். அக்டோபர் 30 வரை 9,3ம் மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு கேதுக்கள் அதன் பிறகு 8, 2மிடம் செல்கிறார்கள். சனி, ராகு, கேதுக்களின்கோட்சாரங்கள் சற்று சுமாராக இருந்தாலும் இந்த தமிழ் புத்தாண்டு முழுவதும் உங்களுக்குகுருபகவான் மிக சாதகமான சுப பலன்கள் வழங்கும் என்பது திண்ணம்.
இதனால் தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் ஏற்படும். மந்தமாக இருந்தவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு காரியம் சாதிப்பார்கள். அலை பாய்ந்த கட்டுக்கடங்காத எண்ணங்கள் கட்டுப்படுத்தப்பட்டு மனதில்அமைதி குடிபுகும். பாதுகாப்பை உணர்வார்கள்.சற்று குழப்பம் ஏற்பட்டாலும் அதற்குரிய தீர்வையும் கண்டுபிடித்து விடுவீர்கள்.இதனால்எந்த பிரச்சனையும் வராமல் காப்பாற்றப்படுவீர்கள் அல்லது மிகப் பெரிய பாதிப்பு இல்லாமல் காப்பாற்றப் படுவீர்கள் அல்லதுபாதிக்கப்பட்டாலும் அசிங்கம், அவமானம் வெளியே தெரியாது. ராசியை பார்க்கும் குருபகவான் எந்த விதத்திலும் உங்களை கைவிட மாட்டார் என்பதால் எந்த பயமும் தேவையில்லை.கண்டகச் சனியின் காலம் என்பதால் சிறிது கவனத்துடன் செயல்பட வேண்டும்.
குடும்பம், பொருளாதார நிலை : ராசி பலம் பெறுவதால் சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டக் காற்று கூரையை பிரித்துக் கொண்டு கொட்டப் போகிறது. வெளிநாட்டுப் பணம் சரளமாக புழங்கும். பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும். ராகுமூலம் பல வழியில் வரும் வருமானம் குருவின் பார்வையால் பயனுள்தாக மாறும்.
உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும்.உங்களின் சமூக அந்தஸ்து பல மடங்கு உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தந்தை வழி பூர்வீகச் சொத்துகள்உங்கள் பெயருக்கு மாறிவிடும். ஆரோக்கிய குறைபாடு அகலும். குருபகவான் இதுவரை தடைபட்ட பாக்கிய, புண்ணிய பலன்கள் அனைத்தையும் நடத்தி வைப்பார்.வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். திருமணத் தடை அகலும்.
பெண்கள் : பல பெண்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் உயர் கல்வி கற்பது ஆன்லைனில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சம்பாதிப்பது என பிசியாக இருப்பார்கள். கணவன், மனைவி உறவு மகிழ்வை தரும். கணவருக்கு தெரியாமல் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.நம்பிக்கையின்பெயரில் கொடுத்த பணம் திரும்ப வராது. பெரும் இழப்பீட்டை புத்தியை பயன்படுத்தினால் தவிர்க்க முடியும்.விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை பத்திரமாக பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
மகம் : புத்துணர்ச்சி உண்டாகும் வருடம்.மன சஞ்சலத்தை அதிகப்படுத்திய கோர்ட்டு பிரச்சினையை சாதகமாகும். தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பலன் உண்டு.சிலருக்கு செல்லப் பிராணிகள் வளர்க்கும் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை இருப்பவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக ஏற்ற காலம். கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடிக்கவும்.உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லுவது அவசியம். பூர்வீகச் சொத்துக்கள் விற்று பெரிய பணம்கிடைக்கலாம். தந்தைக்கு தடைபட்ட அரசின் உதவித் தொகை கிடைக்கும். சிலருக்கு காதல் ஆரம்பமாகும். தினமும் லிங்காஷ்டகம் படிக்கவும்.
பூரம் : மன அழுத்தம் குறையும் காலம். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை, ஆர்வம் அதிகரிக்கும்.கண் திருஷ்டி,மன நல பாதிப்பு, செய்வினை கோளாறு, பய உணர்வு, மாந்தரீக பாதிப்பு அகலும். தந்தைக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் உங்கள் பெயர் பரவலாக பேசப்படும். காதலுக்கு தடை விதித்த பெற்றோர்கள் கிரீன் சிக்னல் காட்டுவார்கள். முதியவர்களுக்கு வாரிசுகளின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்.புதிய நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து உற்றார் உறவினர்களை சந்தித்து மகிழ்வார்கள். தடைபட்டபித்ருக்கள் வழிபாட்டை துவங்குவீர்கள். லலிதா சகஸ்ஹர நாமம் படிக்கவும்.
உத்திரம் 1 : சிந்தனை மற்றும் புத்திக் கூர்மையை அதிகமாகும். விடாமுயற்சி உங்களுக்கு கைகொடுக்கும். சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள் பெரிய தொகையை கடன் கொடுக்க உங்கள் வீடு தேடி வருவார்கள். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும்.இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரம் சூப்பராக நடைபெறும். நல்ல லாபம் கிடைக்கும். ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்யலாம். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தினமும் சிவாஷ்டகம் படிக்கவும்.
பரிகாரம் : வருட கிரகங்களால் சுப பலன்கள் அதிகரிக்க சிம்ம ராசியினர் திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் சென்று பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பிரம்ம நாயகியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406