என் மலர்
சிம்மம் - விசுவாவசு வருட பலன்
சிம்மம்
2025 தமிழ் புத்தாண்டு ராசிபலன்
அமைதி காக்க வேண்டும்
ராஜ யோகம் நிறைந்த சிம்ம ராசியினரே..
எதிலும் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடும் சிம்ம ராசியினருக்கு இனிய விசுவாசு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டின் சனிபகவான் ராசிக்கு எட்டில் நின்று அஷ்டம சனியாக பலன் தரப்போகிறார்.
தனது மூன்றாம் பார்வையால் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் 2ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்ப்பார்.
ஆண்டின் துவக்கத்தில் தொழில் ஸ்தானத்தில் நிற்கும் குரு பகவான் 14.5.2025 இரவு முதல் லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். தனது ஐந்தாம் பார்வையால் 3ம்மிடமான முயற்சி ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையால் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும் பார்ப்பார் 18 5 2025 முதல் ராசியில் கேதுவும் 7ம் மிடத்தில் ராகு பகவானும் சஞ்சரிக்க போகிறார்கள் இதனால் ஏற்பட போகும் பலன்களை பார்க்கலாம்.
விசுவாவசு தமிழ் புத்தாண்டு பொது பலன்கள்
விசுவாசு ஆண்டில் அஷ்டமச் சனி மற்றும் சர்ப்ப தோஷ தாக்கம் உள்ளது. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள். இந்த பலன் உங்களுக்கு பொருந்தாது. ஏனெனில் லாப ஸ்தானத்திற்கு வரக்கூடிய குரு பகவான் உங்களை கவசமாக காப்பார்.
எனவே எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். ஏற்றம் இறக்கம் நிறைந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். எடுத்த காரியத்தில் இறுதிவரை போராடி ஒரு முடிவை பார்த்து விடுவீர்கள். வாழ்க்கையில் போராடி எப்படி வெற்றி பெற வேண்டும் என்று உங்களிடம் இருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.
எதிலும் முதலிடத்தை பிடிப்பது ஒன்றே உங்களின் தலையாய நோக்கமாக இருக்கும் நீங்கள் இந்த ஆண்டு பல்வேறு அனுகூலமான பலனை சந்திக்க உள்ளீர்கள். இயற்கையிலேயே சுறுசுறுப்பான நீங்கள் புத்துணர்வால் அழகு பெறுவீர்கள்.
உடல் தேஜஸ் பெறும். உங்களுடைய பணிகளை விரைவாகவும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள்.அளவிட முடியாத அளவிற்கு நற்பலன்கள் மிகும். தொட்டது எல்லாம் துலங்கும்.
ஜனவசியம் ஏற்படும். தெளிவான மன நிலையோடு செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகிழ்ச்சி தரும். பல விதமான மாற்றங்கள் , ஏற்றங்கள் ஏற்படும். வாழ்வில் வசந்தம் உலா வரும். உற்றார் உறவினர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். மனதில் தெம்பு , தைரியம் ஏற்படும்.
உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். நல்ல தகவல்கள் வீடு தேடி வரும்.குழந்தை பாக்கியம் ஏற்படும். என் அனுபவத்தில் அஷ்டமச் சனியின் காலத்தில் பலர் வீடு, வாகனம் என்று வாழ்க்கையில் செட்டிலாகி உள்ளார்கள். சுய ஜாதக தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றம், வீடு, வாகன யோகம் என வாழ்வாதாரம் உயரும்.
குரு பகவான் 5ம்மிடத்தை தன் வீட்டைத் தானே பார்ப்பதால் ஆண் வாரிசு ஏற்படும். குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவமனைக்கு அலையத் தேவையில்லை.நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் பூர்வீகம் தொடர்பான கர்ம வினை நோய்க்கு செய்யும் சிகிச்சை பலன் தரும். எந்த வைத்திய முறையை கையாண்டால் நோயிலிருந்து விடுபடலாம் என்ற புரிதல் ஏற்படும்.
பொருளாதாரம்
முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். குரு மற்றும் சனியின் சஞ்சாரத்தால் 2,5,8,11 எனும் பண பர ஸ்தானத்தின் இயக்கம் மேன்மையாக உள்ளது. சிந்தித்து நிதானமாக செயல்பட்டால் தாராளமான தன வரவு உண்டு. அதே நேரத்தில் உழைக்காமல் போனில் நேரத்தை முதலீடு செய்தால் உங்கள் வாழ்க்கை கேள்விக் குறிதான்.
அவசியத்தை உணர்ந்து செயல்பட்டால் வழக்கத்தை விட வருமானம் அதிகமாக இருக்கும்.தனியார் நிதி நிறுவனங்கள் அல்லது முறையற்ற ஏலச் சீட்டு நடத்துபவர்கள் பண பரிவர்த்தனைக்கு உரிய ஆவணங்கள் வைத்து இருக்க வேண்டும்.
பிறந்தகால ஜாதகப் படி அஷ்டமாதிபதி ,பாதகாதிபதி , விரைய அதிபதிகள் தசை நடத்தினால் பங்குச் சந்தை முதலீட்டை தவிர்க்கவும்.தங்க நகைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.இந்த காலகட்டத்தில் பூர்வீக சொத்து தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது நல்லது.
மகம்
நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெற வேண்டிய வருடம். குரு கடாட்சத்தால் உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கேள்விக்குறியாக இருந்த பல குழப்பங்கள் விலகும். வம்பு, வழக்கு விவகாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். செல்வாக்கு, கவுரவம் போன்றவற்றில் ஏற்பட்ட பங்கம் நீங்கும்.
மண், மனை வாங்குவது, வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, புதிய வாகனம் வங்குவது என சுப விரயங்கள் ஏற்படும். தொழில் ஜீவனத்தில் எந்த குறையும் வராது. வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். புதிய நட்புக்களால் ஆதாயம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.
பணம், பதவி என்று வாழ்க்கை செழிப்பாகும். புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும்.சுருக்கமாகச் சொன்னால் அஷ்டமச் சனியால் தொழில் பாதிப்பு ஏற்படாமல் குருபகவான் காப்பாற்றுவார்.
பூரம்
குரு லாப ஸ்தானத்தில் நிற்பதால் நெருங்குவதால் எண்ணிலடங்கா சுப பலன்கள் நடக்கவுள்ளது.இது போன்ற கிரக அமைப்பு என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையைத் தரும். அனைத்து செயல்களிலும் தைரியமாக செயல்பட்டு வெற்றியடைவீர்கள்.கடனுக்கு பயந்து ஓடி ஒளிந்த நிலை நீங்கும்.
உறவுகளிடம் நிலவிய சண்டை, சச்சரவு மாறும்.ஆரோக்கியத்துடன் உடல். மன வலிமையுடன் இருப்பீர்கள். தாய் வழிச் சொத்தில் நிலவிய சங்கடங்கள் தீரும். தாயின் பூரண ஆசியும் அன்பும், அரவணைப்பும். கிடைக்கும். சொத்து வாங்குவது விற்பதில் இருந்த தடைகள் விலகும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். போட்ட முதலீட்டை எடுக்க முடியாத நிலை குறையத் துவங்கும்.
உத்திரம் 1
உழைப்பின் பயனை உணர்ந்து செயல் படுவீர்கள். நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.புதியதாக தொழில் துவங்குபவர்கள் முதலீடு அதிகம் இல்லாத சுய தொழில் செய்யலாம். உடன் பிறந்தவர்களின் அன்பு அனுசரனையும் கிடைக்கும்.
அசையா சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திரங்களை சரிபார்ப்பது நல்லது. சிலர் வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் ஈடுபடுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.
உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.கணவன் மனைவி இருவரும் மனமொன்றி நடந்துகொள்வார்கள். மனச் சுமை குறையும். குல தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும்.
திருமணம்
சிம்ம ராசியினருக்கு இது திருமணத்திற்கு ஏற்ற காலம் அல்ல. 29.3.2025 அன்று அஷ்டமச் சனி துவங்குகிறது.18.5.2025 முதல் ராசியில் கேது மற்றும் ஏழில் ராகு என கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. தசாபுத்தி சாதகமாக இருந்தாலும் இரண்டரை ஆண்டு காலம் திருமணம் நடத்துவதை தவிர்ப்பது உத்தமம்.
பெண்கள்
8ம்மிடம் என்பது மாங்கல்ய ஸ்தானம் என்பதால் பெண்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்ல வேண்டும். மருமகன், மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். பிள்ளைகளின் திறமைகள் மகிழ்ச்சி தரும்.
பெண்களின் கருப்பை தொடர்பான பிரச்சனைகளான கருக்குழாய் அடைப்பு, முட்டை உற்பத்தியின்மை பிரச்சனைகளுக்கு மாற்றுமுறை மருத்துவம் நல்ல பலன் தரும்.குல இஷ்ட தெய்வ பிரார்த்தனைகள் மூலம் உங்களை நீங்கள் காத்துக் கொள்ள முடியும்.
மாணவர்கள்
படிப்பு, ஞானம், எண்ணம், விருப்பம் ஆகியவற்றைப் பற்றிக் கூறும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருக்கிறது. மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் இலக்கை நிர்ணயம் செய்து கற்பார்கள். படிப்பில் நிலவிய மந்தத் தன்மை மாறும். புதிய விஷயங்களை சுற்றுக் கொள்வதில் ஆர்வம் கூடும்.
வேதங்கள் கற்பது, ஆன்மீகம் சார்ந்த விசயங்களை கற்பது, செஸ் போன்ற அறிவைத் தூண்டும் விளையாட்டுகளை கற்பது என தங்களின் தனித் திறமையை வளர்த்துக் கொள்ள உகந்த காலம். கிடைத்த சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தி திட்டமிட்டு படித்தால் அஷ்டமச் சனியாலோ, ராகு, கேதுவாலோ படிப்பு தடைபடாது.
பரிகாரம்:
தினமும் பட்சிகள், விலங்குகளுக்கு உணவிட வேண்டும். உடம்பையும், உயிரையும் வளர்ப்பது உணவு. உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில் உண்மையில் பசித்தவருக்கு அன்னதானம் தொடர்ந்து செய்து வர பிரச்சனைகள் பனிபோல் விலகும். சித்தர்கள் ஜீவ சமாதியில் வழிபாடு செய்வது கைமேல் பலன் தரும்.
சிம்மம்
தமிழ் புத்தாண்டு ராசிபலன்
தொழில் வளர்ச்சி பெருகும்! ஆன்ம பலம் நிறைந்த சிம்ம ராசியினருக்கு பிறக்கப் போகும் குரோதி வருட தமிழ் புத்தாண்டு உயர்வுகள் தரும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.
தொழில் குருவின் பொது பலன்கள்:
பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. சிம்ம ராசிக்கு 5, 8ம் அதிபதியான குருபகவான் மே 1, 2024 முதல் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் நின்று. பலன் தரப் போகிறார். புதிய தொழில் முயற்சிகள் முதலில் சோதனை கொடுத்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்.வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். புதிய தொழில் ஒப்பந்தம் மற்றும் ஆர்டர்கள் கிடைக்கும்.
தொழிலுக்கு அரசு அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். தனது 5ம் பார்வையால் ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குருவின் 5ம் பார்வை பதிகிறது. ஊதியஉயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். தன வரவில் நிலவிய தடை தாமதம் சீராகும். 2ம் மிடத்தில் கோட்சார கேது சஞ்சரிக்கிறார். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதை மற்றவர்கள் தவறாக பேசுவார்கள் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது.
குழந்தைகளின் முன்னேற்றம், குடும்பத்தில் சலசலப்பு குறைந்து கலகலப்பு கூடும். குருவின் 7ம் பார்வை சுக ஸ்தானத்தில் பதிகிறது.
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் புதிய நட்பு வட்டாரம் உருவாகும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும்.விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகி விடும் அல்லது வேறு புது சொத்தாகி விடும். சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் மிகுதியாகும். எதிர்ப்பார்த்த இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம் 9ம் பார்வை 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் பதிகிறது. ஆரோக்கியம் மனநிறைவு தரும். பல வருடங்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களிடம் ஒப்படைத்த புதிய பொறுப்புகளை திறம்பட செய்து முடிப்பீர்கள்.
கண்டகச் சனியின் பலன்கள்:
சிம்ம ராசிக்கு சனி பகவான் 6, 7ம் அதிபதி.ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் நிலையே கண்டகச் சனியாகும். ஏழாம் இடத்தில் இருந்து சனி பகவான் உங்கள் ராசியை பாரப்பதால் கண்டக சனி ஏற்படுகிறது. நட்பு ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம்.
7ம்மிடத்தில் நிற்கும் சனி பகவான் தனது 3ம் பார்வையால் 9ம்மிடம் எனும் பாக்கிய ஸ்தானத்தை பார்க்கிறார். தொழில், உத்தியோகம் மற்றும் உயர்கல்விக்காக பெற்றவர்களை, பிள்ளைகளை, குடும்பத்தை பிரிந்து பூர்வீகத்தை விட்டு வெகுதூரம் செல்ல நேரும். 7ம் பார்வையால் ராசியை பார்க்கிறார்.
நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணை, சமுதாய நட்பு ஆகியவற்றால் மன சஞ்சலம், காரியத் தடை, ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். தான் நின்ற இடத்தின் மூலமாகவும் தனது பார்வை பலத்தாலும் எந்த ஒரு செயலை செய்ய சிறப்பான சூழல் இருந்தாலும் பல சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சரிவர இருக்காது. இந்த காலத்தில் ஒருவர் எண்ணியதை குறித்த நேரத்தில் முடிப்பது சிரமம், சுப காரியங்கள் திட்டமிடுதல் நடக்காமல் போகலாம்.
கணவன்- மனைவி உறவுக்குள் இருந்த நல்லிணக்கம் குறையும். இதுவரை உங்கள் வார்த்தைக்கு மதிப்பு தந்த வாழ்க்கைத் துணை உங்கள் கருத்திற்கு எதிர்மறையாக செயல்பட ஆரம்பிப்பார்கள்.10ம் பார்வையால் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் அதிக நாள் வைத்தியம் செய்ய வேண்டிய நோய் தாக்கம், சொத்துகளால், தாய் வழி உறவுகளால் சங்கடங்களை சந்திப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
வேலை தேடுபவர்களுக்கு சரியான வேலை கிடைக்காது. பணியில், இருப்பவர்களுக்கு பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. நன்றாக மதிப்பெண்கள் பெற்று வந்த குழந்தைகளின் படிப்பில மந்தம் ஏற்படும். தன ஸ்தான கேது மற்றும் அஷ்டம ஸ்தான ராகுவின் பலன்கள்.
ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் வம்பு, வழக்கு அவமானம், விபத்து, கண்டம். கோர்ட், கேஸ், சர்ஜரி பற்றிக் கூறும் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். எடுத்த காரியங்கள் நடைபெறுவதில் தடை ஏற்படும்.
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் பிரிவுகள் ஏற்படும். பொதுத் தொண்டில் இருப்பவர்களுக்கும், மக்களுக்கும் இடையே பகை ஏற்படும். தாங்க முடியாத மன உளைச்சல் இருக்கும்.
எதிர்பாராத மருத்துவ செலவில் விரயம் ஏற்படும். நீண்ட தூர பயணம் செய்ய நேரும்.தந்தைவழி உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் உண்டு. சிலர் கடன் வாங்கி புதிய தொழில் முதலீடுகள் செய்யலாம். அஷ்டம ராகுவால் சிலருக்கு அதிர்ஷ்டப் பணம் அதிர்ஷ்ட சொத்து, பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும்.
விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு வீடு மாற்றம் செய்ய நேரும். அசையும், அசையாச் சொத்து வாங்கி மகிழ்வீர்கள்.வெளிநாட்டு வேலை வாய்ப்பு, அரசு உத்தியோக முயற்சி சித்திக்கும்.
உடன் பிறந்தவர்களுடன் தாயை யார் பராமரிப்பது என்ற கருத்து வேறுபாடு அதிகரிக்கும் ராகு கேதுக்கள் சாதகத்தையும், பாதகத்தையும் சேர்த்து வழங்குவதால் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
சிலர் ஒரு கடன் வாங்கி இன்னொரு கடனை அடைக்கலாம். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தொடரும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபரத்திற்கு நம்பகமான வேலையாட்கள் தேடுவீர்கள். வெகு சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட ஆதாயம் உண்டு. பெரிய அளவிளான எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம். உடல் நிலை சற்று மந்தமடையும்.
மகம்:
கேதுவின் நட்சத்திரமான மகம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சிந்தனை செயல் திறன் கூடும் தமிழ் புத்தாண்டாகும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். முகப் பொலிவு ஏற்படும். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். உங்களின் சொத்துக்களை உடன் பிறந்தவர்கள் பயன்படுத்துவார்கள். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும்.
தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். இடமாற்றங்கள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களின் தகுதி திறமைக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதரர் மீண்டும் குடும்பத்துடன் இணைவார். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள். தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.
கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும். இரண்டாவது திருமணம் நடைபெறும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். வேதம் கற்கும் ஆர்வம் உண்டாகும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வர விரும்பிய பலன்கள் நடக்கும்.
பூரம்:
சுக்ரனின் பூரம் நட்சத்திரம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். இது வரை சுணங்கி கிடந்த யோசனைகள் விறுவிறுப்படையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமுதாயத்தில் கவுரவமான நிலையை அடைவீர்கள். வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். உத்தியோகத்தில் நிலவிய இடர்பாடுகள் விலகும்.ஆண்கள் மனைவி பெயரில் தொழில் ஆரம்பிக்கலாம்.
அரசியல் பதவியில் இருந்த முட்டுக் கட்டை விலகும். திருமண முயற்சியில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை பெருகும். தடைபட்ட பாகப் பிரிவினை சொத்து, பணம் வரும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன்-மனைவி உறவில் அன்பு மிளிரும்.
பொருளாதாரத்திற்கு பிறருடைய கட்டுப்பாட்டில் இருந்த நிலை மாறும். புதிய சொந்த வீடு அமையும். தந்தையால் ஆதாயமுண்டு. புதிய வாகனம் வாங்கலாம்.சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள். வீடு கட்டும் ஆர்வம் அதிகரிக்கும்.
தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திர பிராப்தம் உண்டாகும். பாக்கிய பலன்களை அதிகரிக்க மகாலட்சுமியை வழிபடவும்.
உத்திரம் 1:
சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1 சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டான குரோதி வருடம் திறமைகளை வெளிப்படுத்தும் வருடமாக அமையும். இதுவரை வெளியில் தெரியாமல் புதைந்து கிடந்த அனைத்து திறமைகளும் வெளிப்படும்.
அஞ்சாமல் தைரியமாக எல்லா முயற்சியிலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறப்புகளிடையே ஒற்றுமை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். கண்டகச் சனியால் வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அசையும், அசையா சொத்துக் களால் மேன்மை அடைவீர்கள். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு விலகி நல்ல புரிதல் உண்டாகும். புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும்.மற்றவர்களுக்கு ஜாமீன் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும்.
செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும் நண்பர்களுடன் ஏற்பட்ட விரிசல் சீராகி ஆதாயம் உண்டாகும். வியாதிகள் குறைந்து நலமடைவீர்கள்.அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட குடும்பத்தில் நிம்மதி கூடும்.

பரிகாரம்:
சிம்ம ராசியினருக்கு கோட்சார ராகு/கேது மற்றும் சனியின் சஞ்சாரம் சற்று சாதகமற்று உள்ளது. எனவே சரபேஸ்வரரை வழிபட தீவனைகள் உங்களை நெருங்காது. சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார். இவரை தினமும் ராகு காலத்தில் வழிபட கோட்சார கிரகங்க ளின் தாக்கம் அண்டாது.
சிம்மம்
சோபகிருது வருட பலன் 2023
கவனம் தேவை!
விடா முயற்சியால் வெற்றியை எட்டிப் பிடிக்கும் சிம்ம ராசியினருக்கு பிறக்கும்சோபகிருது தமிழ் புத்தாண்டு நினைத்ததை நிறைவேற்றக் கூடிய சுப வருடமாக அமைய நல் வாழ்த்துக்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 22ல் குருபகவான் பாக்கிய ஸ்தானம் சென்று பாக்கிய பலன்களை வழங்கவுள்ளார். ஜனவரி 17 முதல் கண்டகச் சனியின் ஆதிக்கத்தை சனி பகவான் வழங்கிக் கொண்டு வருகிறார். அக்டோபர் 30 வரை 9,3ம் மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு கேதுக்கள் அதன் பிறகு 8, 2மிடம் செல்கிறார்கள். சனி, ராகு, கேதுக்களின்கோட்சாரங்கள் சற்று சுமாராக இருந்தாலும் இந்த தமிழ் புத்தாண்டு முழுவதும் உங்களுக்குகுருபகவான் மிக சாதகமான சுப பலன்கள் வழங்கும் என்பது திண்ணம்.
இதனால் தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் ஏற்படும். மந்தமாக இருந்தவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு காரியம் சாதிப்பார்கள். அலை பாய்ந்த கட்டுக்கடங்காத எண்ணங்கள் கட்டுப்படுத்தப்பட்டு மனதில்அமைதி குடிபுகும். பாதுகாப்பை உணர்வார்கள்.சற்று குழப்பம் ஏற்பட்டாலும் அதற்குரிய தீர்வையும் கண்டுபிடித்து விடுவீர்கள்.இதனால்எந்த பிரச்சனையும் வராமல் காப்பாற்றப்படுவீர்கள் அல்லது மிகப் பெரிய பாதிப்பு இல்லாமல் காப்பாற்றப் படுவீர்கள் அல்லதுபாதிக்கப்பட்டாலும் அசிங்கம், அவமானம் வெளியே தெரியாது. ராசியை பார்க்கும் குருபகவான் எந்த விதத்திலும் உங்களை கைவிட மாட்டார் என்பதால் எந்த பயமும் தேவையில்லை.கண்டகச் சனியின் காலம் என்பதால் சிறிது கவனத்துடன் செயல்பட வேண்டும்.
குடும்பம், பொருளாதார நிலை : ராசி பலம் பெறுவதால் சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டக் காற்று கூரையை பிரித்துக் கொண்டு கொட்டப் போகிறது. வெளிநாட்டுப் பணம் சரளமாக புழங்கும். பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும். ராகுமூலம் பல வழியில் வரும் வருமானம் குருவின் பார்வையால் பயனுள்தாக மாறும்.
உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும்.உங்களின் சமூக அந்தஸ்து பல மடங்கு உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தந்தை வழி பூர்வீகச் சொத்துகள்உங்கள் பெயருக்கு மாறிவிடும். ஆரோக்கிய குறைபாடு அகலும். குருபகவான் இதுவரை தடைபட்ட பாக்கிய, புண்ணிய பலன்கள் அனைத்தையும் நடத்தி வைப்பார்.வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். திருமணத் தடை அகலும்.
பெண்கள் : பல பெண்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் உயர் கல்வி கற்பது ஆன்லைனில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சம்பாதிப்பது என பிசியாக இருப்பார்கள். கணவன், மனைவி உறவு மகிழ்வை தரும். கணவருக்கு தெரியாமல் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.நம்பிக்கையின்பெயரில் கொடுத்த பணம் திரும்ப வராது. பெரும் இழப்பீட்டை புத்தியை பயன்படுத்தினால் தவிர்க்க முடியும்.விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை பத்திரமாக பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
மகம் : புத்துணர்ச்சி உண்டாகும் வருடம்.மன சஞ்சலத்தை அதிகப்படுத்திய கோர்ட்டு பிரச்சினையை சாதகமாகும். தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பலன் உண்டு.சிலருக்கு செல்லப் பிராணிகள் வளர்க்கும் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை இருப்பவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக ஏற்ற காலம். கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடிக்கவும்.உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லுவது அவசியம். பூர்வீகச் சொத்துக்கள் விற்று பெரிய பணம்கிடைக்கலாம். தந்தைக்கு தடைபட்ட அரசின் உதவித் தொகை கிடைக்கும். சிலருக்கு காதல் ஆரம்பமாகும். தினமும் லிங்காஷ்டகம் படிக்கவும்.
பூரம் : மன அழுத்தம் குறையும் காலம். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை, ஆர்வம் அதிகரிக்கும்.கண் திருஷ்டி,மன நல பாதிப்பு, செய்வினை கோளாறு, பய உணர்வு, மாந்தரீக பாதிப்பு அகலும். தந்தைக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் உங்கள் பெயர் பரவலாக பேசப்படும். காதலுக்கு தடை விதித்த பெற்றோர்கள் கிரீன் சிக்னல் காட்டுவார்கள். முதியவர்களுக்கு வாரிசுகளின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்.புதிய நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து உற்றார் உறவினர்களை சந்தித்து மகிழ்வார்கள். தடைபட்டபித்ருக்கள் வழிபாட்டை துவங்குவீர்கள். லலிதா சகஸ்ஹர நாமம் படிக்கவும்.
உத்திரம் 1 : சிந்தனை மற்றும் புத்திக் கூர்மையை அதிகமாகும். விடாமுயற்சி உங்களுக்கு கைகொடுக்கும். சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள் பெரிய தொகையை கடன் கொடுக்க உங்கள் வீடு தேடி வருவார்கள். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும்.இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரம் சூப்பராக நடைபெறும். நல்ல லாபம் கிடைக்கும். ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்யலாம். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தினமும் சிவாஷ்டகம் படிக்கவும்.
பரிகாரம் : வருட கிரகங்களால் சுப பலன்கள் அதிகரிக்க சிம்ம ராசியினர் திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் சென்று பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பிரம்ம நாயகியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
சுபகிருது வருட பலன் - 2023
சுய கவுரவம் காப்பதில் வல்லவர்களான சிம்ம ராசியினருக்கு தமிழ் புத்தாண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.
உங்கள் ராசிக்க 9ம் இடமான பாக்கியஸ்தானத்தில் ராகுவும், சகாய ஸ்தானமான 3ம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.குருபகவான் 8ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 6,7ம் இடத்தில் உலா வருகிறார். குருபகவான் நின்ற 8ம் வீட்டு பலனாக விபரீத ராஜ யோகம் உண்டாகலாம். 8ம்மிடம் என்பதால்நிதானமற்ற செயல்களால் சில வம்பு வழக்குள் ஏற்படலாம். ஆனால் குரு பார்த்த இடத்தின் பலன்கள் உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும்.
இதனால் லட்சியமும், எண்ணங்களும் நிறைவேறும். 3ல் கேது சஞ்சரிப்பதால் மனம்விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில முக்கிய திருப்பங்கள் உங்கள் வாழ்வில் உண்டாகும். 9ல் ராகு நிற்பதால் புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான பாக்கிய பலன்களும் உண்டு. சிலருக்கு மதம் மாறும் எண்ணம் அதிகரிக்கும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் குறையும். ஆறாம் அதிபதி சனி ஆறில் ஆட்சி பலம் பெறுவதால் எதிர்களின் தொல்லை குறையும்.
குடும்பம்: இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் குடும்பத்திற்கு கோடி நன்மைகள் உண்டாகும். ஒரே வீட்டில் வசித்தும் ஒருவருடன் மற்றொருவர் பேசாமல் ஆளுக்கொரு தீவாக மொபைலுடன் வாழ்ந்த நிலை மாறும். குடும்பம் மகிழ்ச்சியாக மாறும் வகையிலான சம்பவங்கள் நடக்கும். அனைவரும் விட்டுக் கொடுத்து இயல்பாக வாழ்வீர்கள். ஈகோ குறையும். சொல்வாக்கால் செல்வாக்கு உயரும். குடும்ப சந்தோஷமாக இருக்கும். கூடி வாழ்வதால் உண்டாகும் நன்மைகளை உணர்வீர்கள். உங்களுக்கு பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும். வேற்று மொழி பேசுபவர்களள், வேற்று மதத்தின வரின் நட்பு மற்றும் உதவிகள் கிடைக்கும்.
ஆரோக்கியம்:ஆறாம் அதிபதி சனி 6ல் ஆட்சி பலம் பெறுவதால் சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.நேரத்திற்கு சத்தான உணவாக நன்றாக சாப்பிட்டு ஒய்வெடுத்தால் எந்த வியாதியும் அண்டாது.வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
திருமணம்: சிம்ம ராசியினருக்கு திருமணத்திற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. மேலும் ஏழாம் அதிபதி சனி கோட்சாரத்தில் 6ல் ஆட்சி பெற்று இருப்பதால் வெகு சிலருக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தடை இருக்கலாம். 5ம் அதிபதி குரு 8ல் ஆட்சி பலம் பெறப் போவதால் சிலர் காதல் திருமணத்தால் அவமானப்பட வாய்ப்பு உள்ளது. ஜனன கால ஜாதகத்தில் 8ம் இடம் சுத்தமாக இருந்து , தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு கோட்சார குருவால் எந்த பாதிப்பும் இருக்காது.
பெண்கள்:கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். மனதிற்கும் நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும். குடும்பச் சுமை சற்று கூடுதலாக இருக்கும். உங்கள் பெயரில் சொத்து வாங்கும் யோகம் உள்ளது.பிறந்த வீட்டு சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் உங்களை கவுரவப்படுத்தும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அதிக கவனம்செலுத்துவீர்கள்.ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும்.எட்டாமிடமான மாங்கல்ய ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
மாணவர்கள்:3ல் ராகு 9ல் கேது இருப்பதால் சில மாணவர்களுக்கு ஞாபக சக்தி குறையுலாம். படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு தடைபட்ட கல்வியை மீண்டும் தொடர வாய்ப்பு கிடைக்கும். சில பிள்ளைகள் பள்ளி, கல்லூரியை மாற்றலாம். தினமும் ஹயக்கீ வரை வழிபட படித்த பாடம் நன்றாக மனதில் பதியும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி கற்க விரும்புபவர்களுக்கு நல் வாய்ப்பு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள்: மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் எளிதில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பியவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது.
முதலீட்டாளர்கள்:பூர்வீக குலத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமான பலன் உண்டு. வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும். சனி மற்றும் குருவின் நிலைகள் சற்று சாதகமற்று இருப்பதால் புதியதாக தொழில் தொடங்குபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகள்:லட்சியத்தையும், கொள்கையையும் விடாது பின்பற்றுவீர்கள் தொட்டது துலங்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கட்சியில் புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும்.நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும்.
கலைஞர்கள்: ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும்.
விவசாயிகள்: விவசாயத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். மிகுதியான லாபம் கிடைக்கும். சிலர் குத்தகைக்கு விவசாய நிலம் பெறுவீர்கள். சிலர் சொந்தமாக விவசாய நிலம் வாங்குவீர்கள்.4ம் இடத்தில் கேது இருந்த காலத்தில் ஏற்பட்ட இழப்பை இந்த ராகு/கேது பெயர்ச்சி உங்களுக்கு வழங்கும். வாய்க்கால், வரப்பு தகராறை மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்கவும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்
ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார். 18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 9ல் ராகுவும் 3ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உண்டாகும். பூர்வீகச் சொத்து பிரிப்பதில் சகோதரரிடம் கருத்து வேறுபாடு உண்டாகலாம்.உயில் பிரச்சனை தலை தூக்கும்.
ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். எழுதிய உயில், ஆவணங்களில் சிலர் திருத்தம் செய்வார்கள். பாகப்பிரிவிதையில் மன பேதம் மிகுதியாகும். கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து சிலர் தனிக் குடித்தனம் செல்லலாம். அதிக வேலையினால் மனஅழுத்தம் அதிகமாகும். மனதில் கலக்கம் தோன்றும். ஞாபக சக்தி குறையலாம் சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்லலாம்.
குரு:29.7.2022 முதல் 23.11.2022 வரை ராசிக்கு 6ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் தேவையற்ற வம்பு வழக்கை தவிர்க்க வேண்டும்.தொலைந்த, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். நம்பிக்கையான, விசுவாசமான வேலை ஆட்கள் கிடைப்பார்கள்.
பரிகாரம்:ஞாயிறு காலை 6 --7 மணி வரையான சூரிய ஒரையில் வில்வ அர்ச்சனை சிவ வழிபாடு செய்து வர நன்மைகள் அதிகரிக்கும்.
தொழில் வளர்ச்சி சிறக்கும்
தன ஸ்தானமான இரண்டாமிடத்திற்கு குருவின் 7ம் பார்வை இருப்பதால் பொருளாதாரத்தில் தடையில்லாத வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். தொழில் வளர்ச்சி நல்ல லாபத்தை பெற்றுத் தரும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், உணவுத் தொழில் நடத்துபவர்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 6ல் சனி பகவான் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் விரும்பிய கடன் தொகை கிடைக்கும். விரய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம் என சுப செலவுகள் மிகுதியாக இருக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406