வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை
5.10.2025 முதல் 11.10.2025 வரை
விரும்பிய புதிய மாற்றங்கள் உருவாகும் வாரம். ஜென்ம குருவின் ஆதிக்கம் துவங்கப் போகிறது. குரு பகவான் அதிசாரமாக ராசிக்குள் நுழைந்து உச்சமடைய போகிறார். சுமார் 48 நாட்கள் புதிய மாற்றங்கள் உருவாகலாம். புதியதாக சுய தொழில் துவங்குவதை விட உத்தியோகமே சிறப்பு. முதலீட்டாளர்கள் புதிய தொழில் ஒப்பந்தத்தில் கவனமாக செயல்பட வேண்டும்.
தொழில் கூட்டாளிகளிடம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். புதிய தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் என புதுப்புது மாற்றங்கள் நிகழும். தடைபட்ட வீடு கட்டும் பணி தொடரும். கணவன்-மனைவி ஒற்றுமை, திருமணம், சுபகாரியங்கள் நடப்பது போன்ற நற்பலன்கள் நடக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் உடல் ஆரோக்கியமும் சிறக்கும்.
இந்த வாரம் தீபாவளிக்கு புதிய ஆடைகள் வாங்குவீர்கள். சிலருக்கு தாயார் மூலம் கணிசமான தொகை கிடைக்கும். 6.10.2025 அன்று காலை 12.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். திங்கட்கிழமை சிவ வழிபாடு செய்வதால் உயர்வான நிலையை அடைய முடியும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406