கடகம் - குரோதி வருடம் வருட பலன்

சோபகிருது வருட பலன் 2023

Published On 2023-04-08 08:21 GMT   |   Update On 2023-04-08 08:21 GMT

வளர்ச்சியும், எழுச்சியும் உண்டு.!

சந்திரனைப் போன்ற அழகும் மதி நுட்பமும் நிறைந்த கடக ராசியினருக்கு இந்த சோப கிருது வருட தமிழ் புத்தாண்டு வளர்ச்சியும் எழுச்சியும் வழங்கிட நல் வாழ்த்துக்கள். திருக்கணித பஞ்சாங்கப்படிஇந்த தமிழ் புத்தாண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 22 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானதம்செல்கிறார். ஜனவரி 17 முதல் சனி பகவான் அஷ்ட ஸ்தானத்தில் நின்று அஷ்டம சனியின் ஆதிக்கத்தை வழங்கிக் கொண்டு இருக்கிறார். அக்டோபர் 30, 2023 வரை 10, 4ம்மிடத்தில் ராகுவும், கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். அதன் பிறகு 9, 3ம்மிடம் செல்கிறார்கள். இது அஷ்டமச் சனியின் காலம் என்றாலும் தொழில் ஸ்தான குருவும் ராகு, கேதுவும் தங்கள் ஆதரவால் உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித் தருவார்கள்.

மதி நுட்பமான காரியத்தால் அனைவரது நட்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். எதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தனியார், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். கடல் கடந்து சென்று பொருள் ஈட்டும் யோகமும் உள்ளது.திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும்.புதிய தொழில் முயற்சி, தொழில் விரிவாக்கம் போன்றவற்றை சுய ஜாதக ரீதியாக அமைத்துக் கொள்ள வெற்றி உங்களுக்கு துணை நிற்கும்.சுப கடன் வாங்கி பூமி, வீடு,வாகன, வசதியை பெருக்குவீர்கள். ஆரோக்தியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கண்திருஷ்டி, மன நல பாதிப்பு, செய்வினைக் கோளாறு, பய உணர்வு, மாந்தரீக பாதிப்பு அகலும். .அஷ்டமச் சனி முடியும் வரை திருமணத்தை தள்ளிப் போடுவது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை: உங்களின் எண்ணங்கள், முயற்சிகள் உயர்வானதாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். உங்களுடைய தகுதி, திறமைஉயரும் . சமுதாய அங்கீகாரம்ஏற்படும். பேச்சுத் திறமை அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மாற்றங்களும் ஏற்றங்களும் வீடு தேடி வரும்.திடீர்அதிர்ஷ்டம், தனவரவு வரும். சுப செலவு ஏற்படும். சிலருக்கு அவசரத்திற்கு கையில் பணம் இல்லாவிட்டலும் கேட்ட இடத்தில் பணம் கிடைத்து முக்கிய தேவையை நிறைவு செய்ய முடியும்.வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும்.பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம்போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.சிலருக்கு பிள்ளைகள் மூலம் வீடு, வாசல் யோகம் உண்டாகும்.

பெண்கள்: கணவன், மனைவி உறவில் இணக்கமும்,அன்பும் இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு,தாய் வழியில் வரவேண்டிய சொத்தை நினைத்து மனதை வருத்தி உடல் ஆரோக்கியத்தை கெடுக்க கூடாது. உடல் நோய்க்கு மருந்துண்டு. மனநோய்க்கு காலம் தான் மருந்து. இரண்டாம் இடத்திற்கு குரு பார்வையுடன்சனி பார்வையும் இருப்பதால் சிறிய மனசஞ்சலம் மற்றும் வாக்குவாதத்திற்கு பிறகே தாய்வழி சொத்து வந்து சேரும். நம்பிக்கையும், தைரியமும் மனிதனுக்கு மிக முக்கியம். நம்பிக்கையும் நிதானமும் இருந்தால் வெற்றி நிச்சயம்.

புனர்பூசம் 4: அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும் காலம். தொட்ட காரியங்கள் துலங்கும். குல தெய்வ அருள் கிடைக்கும்.சுய முயற்சிகள் பலிதமாகும். தாய், தந்தை பொருள் உதவி செய்து தொழில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.சிறு குழந்தைகளுக்கு பேச்சு வருவதில் கால தாமதம் ஏற்படும். இதற்காக பணம் , நேரத்தைவீண் செய்ய வேண்டாம் தானாக சரியாகிவிடும்.

என்றோ வாங்கிய பங்குகள் இப்பொழுது நல்ல லாபத்தை பெற்றுத்தரும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. நிலுவையில் உள்ள தொகைகள் கைக்கு வந்து சேரும்.சிலருக்கு சொத்து தொடர்பான வழக்குகள் உருவாகலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு உறுதி. தினமும் சிவ புராணம் படிக்கவும்.

பூசம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் மற்றும் தைரியம் உண்டாகும் காலம். நீண்ட காலமாக முடங்கி கிடந்த அனைத்து காரியங்களும் வெற்றியைத் தரும்.

நோய் தாக்கம் குறையும், கடன் நீங்கும்.எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள். ஞாபகசக்தி அதிகரிக்கும்.பாகப் பிரிவினை மற்றும் சொத்து தொடர்பான கோர்ட், கேஸ் பிரச்சனையில் சாதகமான தீர்ப்பு வரும் உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பொன், பொருள் ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். மன சஞ்சலத்தால் வேறு மதத்திற்கு மாறியவர்கள் மீண்டும் சொந்த மதத்திற்கு மாறுவார்கள். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். அஷ்டமச் சனியின் தாகத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் பெரும் பாதிப்புஏற்படாது' தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். தினமும் திருக்கோளாறு பதிகம் படிக்கவும்.

ஆயில்யம் : விபரீத ராஜ யோகத்தால் சிற்றின்பம், பேரின்பமாக மாறி,உற்சாகப்படுத்தும் காலம். பல்வேறு வழிகளிலும் செல்வமும் அதிர்ஷ்டமும் உங்களை திணறடிக்கும். எவ்வளவு தாழ்வான நிலையில் இருப்பவரும் மிகக் குறுகிய காலத்தில் லாபக் கடலில் நீந்துவீர்கள் . பெரும் வாழ்வியல் மாற்றம் நிகழப் போவதில் எந்த சந்தேகமும் இல்லை.அந்நிய மதத்தவர் அல்லது அந்நிய மொழியினரால் ஆதாயம் ஏற்படும்.இளைய மனைவியின் பூர்வீகச் சொத்து உங்கள் பெயருக்கு வரும்.சொத்து வாங்கும், விற்கும் முயற்சியில் பலிதமாகும். மூத்த சகோதரம், சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும். தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை கடைபிடிப்பது அவசியம். அலைச்சல் மிகுந்த பயணம் உண்டாகும். விவசாயிகளுக்கு அரசு வகை ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கை துணைக்கு வட்டியில்லா கடன் கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு தேடி வரும்.தினமும் சுந்தரகாண்டம் படிக்கவும்.

பரிகாரம் : அஷ்டமச் சனியின் பாதிப்பு விலகி சுப பலன் அதிகரிக்க தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் உள்ள அருள்மிகு சனீஸ்வரரை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News