கடகம் - இன்றைய ராசி பலன்கள்
null

சுபகிருது வருட பலன் - 2023

Published On 2022-05-20 10:10 GMT   |   Update On 2023-04-10 07:58 GMT

கற்பனையுணர்வு மிகுந்தகடக ராசியினருக்கு தமிழ் புத்தாண்டு நிறைந்த பொருளாதாரத்தை வழங்க நல் வாழ்த்துக்கள்.

இந்த புத்தாண்டில் ராகு பகவான்10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். கேது பகவான் 4ம் இடமான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 7, 8ம் இடங்களில் சஞ்சரிக்கிறார். இந்த சுப கிருது ஆண்டு முழுவதும் பாக்கியாதிபதி குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் ஒளிமயமான எதிர்காலம் அமையப்போகிறது. கண்டகச் சனியின் பாதிப்புகள் குறையும்.

கடந்த 5 மாதங்களாக அஷ்டம குருவால் ஏற்பட்ட இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும். பத்தில் சஞ்சரிக்கும் ராகு நிலையான தொழிலால் உங்களைவளம் செய்யப் போகிறார். குருபகவான் ராசியை பார்ப்பதால் தடை பட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும். மனக் குழப்பம் நீங்கி தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள் மொத்தத்தில் ஆரவாரம் நிறைந்த புத்தாண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குடும்பம்: ராசி, 5 மற்றும் 9ம்மிடம் குருவின் பார்வையால் புனிதமடைவதால் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையான உறவுகளின் அன்பில் ஆனந்தம் அடைவீர்கள். பிரிந்த குடும்ப உறவுகளின் வருகை ஆறுதலையும் நிம்மதியையும் தரும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும். ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். சிலருக்கு மருமகன், மருமகள் வருவார்கள்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.விவகாரத்து வழக்கு சாதகமாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

ஆரோக்கியம்: 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் கேது நிற்பதால்சிலருக்கு யூரினரி இன்பெக்சன், கல்லடைப்பு போன்ற கணையம், சிறுநீரகம் சம்பந்தமான உடல் உபாதைகள் தோன்றும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். தொழில் அலைச்சலால் நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாது.ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் உடல் உபாதைகள் எளிதில் கட்டுப்படும்.

திருமணம்:பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த கடக ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும்.சிலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும். 2023ல் அஷ்டமச் சனி ஆரம்பமாகப் போவதால் 2022க்குள் திருமணத்தை நடத்தி முடிப்பது நல்லது.

பெண்கள்:இந்த ராகு கேது பெயர்ச்சி மகிழ்ச்சியை மிகைப்படுத்தி தரும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். உற்றார் உறவினர்களுடன் நிலவிய மன பேதங்கள் மறையும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். தாய் வழிச் சொத்து கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். வீட்டுக் கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். இந்த ஆண்டு அனைத்து வகையிலும் திருப்புமுனையாக அமையும்.

மாணவர்கள்:மாணவ - மாணவிகளின் கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.கல்வியில் சாதனை படைக்கக்கூடிய நல்ல காலம். உயர் கல்விக்கான வாய்ப்பு மிகச் சுலபமாக கிடைக்கும். வெளியூரில் அல்லது வெளிநாட்டில் விடுதியில் சென்று தங்கி படிக்கும் வாய்ப்பு உருவாகும்.4ல் கேது இருப்பதால் பரிட்சைக்கு செல்லும் முன்பு விநாயகரை வழிபடவும்.

உத்தியோகஸ்தர்கள்:உத்தி யோகத்தில் இருப் பவர்களுக்கு பொறு ப்புகள் அதிகமாக வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும்.வருமானம் அதிகரிக்கும். உங்களது கடமைக்களை சிறப்பாக நிறைவேற்றி புகழ் அடைவீர்கள். சக ஊழியர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும்.

முதலீட்டாளர்கள்:சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அபாரமான வளர்ச்சி இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். 10ல் ராகு இருப்பதால் நியாயம், தர்மத்திற்கு கட்டுப்பட்டு தொழில் நடத்தியவர்கள் கூட அதை காற்றில் பறக்க விட்டு குறுக்கு வழியில் தொழிலை வளர்க்க விரும்புவார்கள்.சுய தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு மிகச் சிறப்பான நல்ல நேரம். உற்பத்தி, கொள்முதல் அதிகரித்துக் கொண்டே இருக்கும் தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும். 17.1.2023ல் அஷ்டமச் சனி ஆரம்பமாகுவதால் தொழில் தொடர்பான அனைத்து விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அரசியல்வாதிகள்:சனியின் சஞ்சாரம் சற்று சுமாராக இருப்பதால் அரசியல் வாதிகளுக்கு பொது மக்களுக்கும் இடைய கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வாக்குறுதி கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அநாவசியமான விமர்சனங்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

கலைஞர்கள்:கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான தொழில் வளர்ச்சி ஏற்படும். உங்களது திறமையை வெளி உலகத்திற்கு காட்ட புதிய, புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். படப்பிடிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்காக கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டும்.இசைக் கலைஞர்கள், சினிமா பத்ரிக்கையாளர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள் வசனகர்த்தாக்கள் ஆகியோர்க்ளுக்கு விருது கிடைக்கும்.

விவசாயிகள்:செவ்வாயின் வீட்டில் சஞ்சரிக்கும் ராகு அபரிமிதமான நற்பலன்களை வழங்குவார். எதையும் தைரியமாக எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளுக்குஅதிக விளைச்சல் மற்றும் கால்நடைகள் வளர்ப்பில் வருமானம் அதிகரிக்கும். விளை நிலங்கள் தொடர்பான பங்காளி சண்டை பேச்சுவார்த்தை மூலமாக சரியாகும்.

ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 10ல் நிற்கும் ராகுவாலும் 4ல் நிற்கும் கேதுவாலும் சில சங்கடங்கள் உருவாகலாம். ஜாதகரின் பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்கு ராகு உறுதுணையாக இருந்தால் கூடதொழில் மூலம் பெயருக்கு ஒரு கலங்கமும் ஏற்படலாம்.

உங்கள் அறியாமை மற்றும் அவசர புத்தியால் சட்டச் சிக்கல் மற்றும் வாஸ்து குற்றம் நிறைந்த வீடு, மனைகளை வாங்க நேரலாம்.குறைந்த மதிப்புள்ள சொத்தை அதிக விலை கொடுத்து வாங்கலாம். அதிக மதிப்பு உள்ள சொத்தை குறைந்த விலைக்கு விற்கலாம்.சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகலாம். மின்சாதனங்கள், வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும்.

குரு: 29.7.2022 முதல் 23.11.2022 வரை ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் கணவன், மனைவி உறவில் விரிசல் ஏற்படலாம். அல்லது தொழில் உத்தியோகம் தொடர்பாக தம்பதிகள் பிரிந்து வாழலாம். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிடிப்பு குறையும்.நம்பியவர்களே துரோகம் செய்யலாம். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். எந்த ஒரு நிலையிலும் அவசரம் வேண்டாம்.

பரிகாரம்:வியாழக்கிழமை காலை 11--12சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்க நன்மை உண்டாகும்.

கடன் சுமை தீரும்

5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடன் பிரச்சனையிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய சிக்கல்கள் தீரும். பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். எதிர் பாராத தனவரவினால் பொருளாதார மாற்றமும் ஏற்றமும் மன மகிழ்வை தரும். வங்கியில் உபரித் தொகை சேமிப்புத் தொகை உயரும். கரைந்த சேமிப்புகள் வளரும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News