கும்பம் - குரோதி வருடம் வருட பலன்

சோபகிருது வருட பலன் 2023

Published On 2023-04-08 08:24 GMT   |   Update On 2023-04-08 08:25 GMT

பொறுப்புடன் செயல்பட வேண்டும்.!

கும்பத்தைப்போல் குணத்தில் உயர்ந்த கும்பராசியினரின் கனவுகள் நனவாக தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பிறக்கப்போகும் சோபகிருது வருட தமிழ் புத்தாண்டில் ஆண்டின் தொடக்கத்தில் வருட கிரகமான குருபகவான் திருக்கணிதபஞ்சாங்கப்படி ஏப்ரல் 22 முதல் மூன்றாமிடமான முயற்சி, சகாய ஸ்தானம் நோக்கி செல்கிறார்.

ஜனவரி 17ல் நடந்த சனிப் பெயர்ச்சியின் படி சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். கும்ப ராசிக்கு ஜென்மச் சனியின் ஆதிக்கம் உள்ளது. தற்போது 3,9ல் சஞ்சரிக்கும் ராகு,கேதுக்கள் அக்டோபர் 30க்குப் பிறகு 2,8ம்மிடம் செல்கிறார்கள். வேலை, தொழில் மாற்றம்இடமாற்றம் கவலையைத்தரும். சுய தொழில் முதலீடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்றாலும் போதிய வருமானம் இருக்காது. கடன் தொல்லையால் மனம் கலங்க நேரும். வரவை விட செலவு பல மடங்காக அதிகரிக்கும். மனம் எதிலும் லயிக்காது.

புதிய போட்டியாளர்களும் விரோதிகளும் உருவாகுவார்கள். பணவரவில் தடையுண்டாகும். இக்காலத்தில் அனைவரிடமும் எச்சரிக்கையுடன் பழகினால் மட்டுமே சங்கடங்களிலிருந்து தப்ப முடியும். ந்த விசயத்தையும் அவசரப்பட்டுச் செய்யாமல் அனுபவஸ்தரின் ஆலோசனை கேட்டு செய்ய வேண்டிய நேரம்.இல்லத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சு நடைபெறும்.வழக்கு விவகாரங்களில் இழுபறியான சூழல் உண்டாகும். பிள்ளைகளுக்கு சுப நிகழ்வு நடத்தி ஆனந்தமடைவீர்கள்.

குடும்பம், பொருளாதாரம் : ஜென்மச் சனியின் காலம் என்றாலும் உழைப்பவர்களுக்கு சனி பகவான் உறுதுணையாக இருப்பார்என்பதால் கலங்க வேண்டாம். சோதனை காலத்தைசாதனை காலமாக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது.

நாளைய வருமானத்திற்குரிய தொகை இன்றே செலவாகிவிடும். உறவுகள் உங்களை விட்டு விலகும்.மனிதனின் சட்டைப் பையில் பணம் இல்லை என்றால் முதலில் விலகுவது உறவுகளே .யார் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள் என்று நினைத்தீர்களோ அவர்கள் பாதகத்தை தருவார்கள். அவசரமான சூழ்நிலையிலும் உடனிருந்து உதவும் உறவுகளை குருவும் சனியும் அடையாளம் காண்பிக்கப் போகிறார்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வழக்கு பாதகமாகும். சிலர்பூர்வீகத்தை விட்டு வெகு தூரம் சென்று குடியேறலாம். அலைச்சல் மற்றும் விரையம் மிகுதியாக இருக்கும்.

பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இழப்புகள் எந்த நேரத்தில் எப்படி வரும் என்று யூகம் செய்ய முடியாது.தூக்கமின்மை மிகுதியாக இருக்கும். கண்கள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். சிலருக்கு கண்ணாடி அணிய நேரும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை இருக்கும்.

பெண்கள் : குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அடிக்கடி மங்களகரமான விசேசங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும்.பிறந்த வீட்டாரும்,புகுந்த வீட்டாரும் ஒன்றாக கலகலப்பாக பழகுவார்கள். மாமியர், மருமகள் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். ஜென்ம சனியினால் ஏற்படும் மன சஞ்சலத்தைக் குறைக்க தினமும் ஸ்ரீராம ஜெயம் எழுதவும்.

அவிட்டம் 3, 4 : ஆன்மீக வழிபாட்டின் மூலம் மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும் காலம். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் கொண்டு செல்லாமல் தாங்களே தீர்த்துக் கொள்வதால் ஊடல் கூடலாகும். வீடு, வாகனம் போன்ற சுப செலவுகளுக்கு சகோதரியிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும்.பணியில் தேவையற்ற அலைச்சல்களால் விரயங்கள் ஏற்படலாம். நாளும் சுப பலன்களை அதிகரிக்க தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

சதயம் : சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும் காலம். புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள். இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் கண் திருஷ்டி, போட்டி-பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். கடன் பிரச்சினைகளால் மனவருத்தங்கள் ஏற்படும். சில முக்கிய சம்பவங்கள் பாதகமாக இருப்பது போல் தோன்றினாலும் முடிவில் நன்மையாகவே இருக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் முன்பு பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். உடல் அசதி, அசவுகரியம் மற்றும் பொருள் விரயத்திலிருந்து விடுபட தினமும் துர்க்கையின் துக்க நிவாரண அஷ்டகம் கேட்கவும்.

பூரட்டாதி 1,2,3 : எதிரிகள் தொல்லை நீங்கி நம்பிக்கையும், பலமும், தைரியமும் அதிகரிக்கும் காலம். பல்வேறு காரணங்களால் அவமானத்துடன் வாழ்ந்த நிலையில் மாற்றம் உண்டாகும்.தொழில், வேலைக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்த நிலை மாறி ஒரே இடத்திலிருந்து பணிபுரியும் நிலை உண்டாகும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் ஒப்பந்தத்தில் கவனம் தேவை.எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும்.உடன் பிறந்த இளைய சகோதரர்களிடம் வீண்விவாதங்களை தவிர்க்கவும். உங்களை வாட்டிய கடன் பிரச்சினை மற்றும் வாழ்க்கைத் துணையின் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். வளர்ப்பு பிராணிகளிடம் கவனத்துடன் செயல்படவும். உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.

பரிகாரம் : கும்பராசியினர் பூலோக கைலாயம் என போற்றப்படும் மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயில் சென்று வர ஜென்மச் சனியின் பாதிப்பு குறையும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News