search icon
என் மலர்tooltip icon

    கும்பம் - குரோதி வருடம் வருட பலன்

    கும்பம்

    தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    நினைத்ததை நடத்தி முடிப்பதில் வல்லவரான கும்ப ராசியினருக்கு இந்த குரோதி வருட தமிழ் புத்தாண்டு அனுகூலமான ஆண்டாக அமைய நல் வாழ்த்துக்கள்.

    சுகஸ்தான குருவின் பலன்கள்:

    கும்ப ராசிக்கு 2, 11ம் அதிபதியான குரு பகவான் ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானம் செல்வது சுபமான பலனாகும். 4ம்மிடம் என்பது வீடு, வாகனம், கால்நடை பாக்கியம், தாயன்பு, தேக சுகம், கல்விநிலை பற்றிக் கூறுமிடம். சொத்து, வீடு, வாகனம் என உங்கள் ஆழ்மன எண்ணம், ஆசைகள் நிறைவேறும். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி 4ம் மிடம் செல்வதால் பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும்.

    குடும்ப சுமை குறையும். பணம் எனும் தனம் சமூக அங்கீகாரத்தை பெற்றுத்தரும். ராஜ மரியாதை கிடைக்கும். குருவின் 5ம் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிகிறது. அதிர்ஷ்டம், புதையலை நம்பி கால விரயம் செய்வீர்கள். தவறான சொத்து அல்லது பயன்படாத சொத்தை கட்டிக்காத்து ஏமாறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். காது, மூக்கு தொடர்பான அறுவை சிகிச்சை நடக்கலாம்.

    பங்குச் சந்தை முதலீடுகள் நிலை தடுமாற வைக்கும். உங்களிடம் வேகம் அதிகரித்து உச்ச கட்ட கோபத்தை வெளிக்காட்டுவீர்கள். சிலருக்கு கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்படலாம். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பதிகிறது.

    10ம்மிடம் என்பது தொழில் ஸ்தானம் மட்டுமல்ல, கர்ம ஸ்தானம். குழந்தை குழந்தை பாக்கியம் ஏற்படும். கர்மம் செய்ய புத்திரம் இல்லாதவர்களுக்கு புத்திரன் பிறப்பான். உங்களின் செயல் பாடுகளை மாற்றிக் கொண்டே இருப்பீர்கள் இதுவரை ஒரு தொழில் செய்தவர்கள் புதிய இணைத் தொழில் துவங்குவார்கள்.

    சிறிய தொழில் செய்தவர்கள் தொழிலை விரிவுபடுத்துவார்கள். ஆனால் ஜென்மச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக வலிமையின் படி தொழில் முயற்சியில் ஈடுபடுவது நல்லது. குருவின் 9ம் பார்வை விரய ஸ்தானத்தில் பதிகிறது. எதையும் யோசிக்காமல் புதிய சொத்துக்கள் வாங்கிப் போடுவது உத்தமம். நிலைமை சீராகும் போது கடன் தானாக அடைபட்டு விடும்.

    ஜென்மச் சனியின் பலன்கள்:

    ராசி அதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் குரோதி வருடம் முழுவதும் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். வேலைப் பளு அதிகமாகும். வீண் விரயங்கள் மிகுதியாகும். சனியின் 3ம் பார்வை மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் பதிகிறது. அடமானத்தில் உள்ள சொத்து நகைகளை மீட்பார்கள். மாணவ மாணவியர் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். சம்பந்திகளுடன் ஏற்பட்ட பிணக்கு மறையும்.

    சனியின் 7ம் பார்வை சம சப்தம ஸ்தானமான களத்திர ஸ்தானத்தில் பதிகிறது. சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். சுய ஜாதக ரீதியாக தசா புக்தி சாதகமற்றவர்கள் சிலர் நல்ல தொழில் கூட்டாளிகளை விலக்கி டூபாக்கூர் கூட்டாளிகளை நம்பி ஏமாந்து போகலாம். முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடு மிகும். கோட்சார ரீதியான புனர் பூ தோஷத்தால் திருமண முயற்சிகள் இழுபறியாகும்.

    பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் சம்மந்தம் முடிப்பீர்கள். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். தொழில் உத்தியோகத்திற்காகவும், கருத்து வேறுபாடு காரணமாகவும் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். கூட்டுத் தொழில் சிறைப்படையும். தொழில் கூட்டாளிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். சனியின் 10ம் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. இயல்பான பணியை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.திறமையான வேலையாட்கள் கிடைப்பார்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். வெளிநாட்டு பயணம் மற்றும் வேலையில் நிலவிய தடைகள் விலகும். தொழில் துவங்கி நிலைத்து நிற்க முடியாமல் தவித்தவர்களின் திறமையை வெளிப்படுத்த உகந்த காலமாக அமையும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் விலகும்.

    2ல்ராகு / 8ல் கேதுவின் பலன்கள்:

    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான 2 ல் ராகுவும் விபரீத ராஜ யோகம் விபத்து, கண்டம், வம்பு, வழக்கு, சர்ஜரி பற்றிக் கூறும் அஷ்ட ஸ்தானத்தில் வழக்கிற்கு காரக கிரகம் கேது சஞ்சரிக்கிறார். 2ம்மிடமான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து குரு பகவானைப் போலவே செயல்படப்போகிறார். குடும்பத்தில் ஒற்றுமை நிம்மதி பெருகும். புதிய வேலையில் நிறைவான ஊதியமும் மனத் திருப்தியும் ஏற்படும்.

    பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சமுதாய மதிப்பும், மரியாதையும் காப்பாற்றப்படும். திடீர் தன வரவை ஏற்படுத்தும் சக்தி ராகுவிற்கு உண்டு என்பதால் பொருளாதார வசதி அதிகரிக்கும். பல வழிகளில் இருந்தும் பணம் வரும்.

    வெளிநாட்டுப் பணம் கையில் பணம் புரளும். சுய சம்பாத்தியம் பெருகும்.பொன்னும், பொருளும் சேரும். துன்பங்கள் பொசுங்கி விடும். நல்ல மாற்றங்கள், திடீர் திருப்பங்கள் ஏற்படும். இழந்த அனைத்தையும் திரும்பப் பெறப் போகிறீர்கள். நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும்.

    அஷ்டம கேதுவால் குபேர யோகம் கிடைக்கப்போகிறது. கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து விபரீத ராஜ யோகத்தை கொடுக்கப்போகிறார். மன பேதத்துடன் கருத்து வேறுபாட்டுடன் வாழும் அம்மா பிள்ளைகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவார். பட்டா மற்றும் முறையான சொத்துப் பத்திரம் இல்லாத சொத்துக்களுக்கு முறையான ஆவணங்கள் கிடைக்கும்.

    வட்டிக் கொடுமையில் சிக்கி பல வருடங்களாக மீட்க முடியாத அடமானச் சொத்துக்களை பேச்சு வார்த்தையின் மூலம் திருப்பப் பெற உகந்த காலம். ஒரு சிலருக்கு விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம், வம்பு, வழக்கு போன்ற அசுப பலன்களும் ஏற்படும்.

    பெரிய அளவில் முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக வாங்கித்தர வேண்டாம். இருப்பதை காப்பாற்றுவது புத்திசாலித்தனம்.என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும்.

    அவிட்டம் 3, 4:

    செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 3, 4ம் பாதம் கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டில் மன உளைச்சல் அகலும். எந்த ஒரு செயலிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். கடந்த காலத்தில் நிலவிய பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாது. சிலருக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பிள்ளைப் பேறு, உயர்கல்வி போன்ற சுப விரயங்கள் ஏற்படும்.

    தொழில் வளம் சிறக்கும். வாக்கு சாதுர்யத்தால் தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும். அலுவலக டென்ஷன் குறையும்.உங்கள் மீது போடப்பட்ட வழக்கில் தீர்ப்பு சாதகமாகும் அல்லது தண்டனைக் காலம் குறையும். தாய்மாமனுடன் இருந்த மனஸ்தாபம் மாறும். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெறுவார்கள்.திருமணம், புத்திரபிராப்தம் போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும்.

    ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர்.முருகனை வழிபடவும்.

    சதயம்:

    ராகுவின் சதயம் நட்சத்திரம் கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருட புத்தாண்டு நல்ல மாற்றத்தை தரும். எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். வாழ்வில் வசந்தம் வீசும். உபரி வருமானத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். உங்கள் சேமிப்புகள் சுப விரயங்களாக மாறும். சுய தொழில் செய்பவர்களுக்கு இக் காலம் வசந்த காலமாக மாறும். லாபம் பல வழிகளிலும் வரும்.

    தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கேட்ட உதவி கிடைத்து முன்னேற்றம் காண்பீர்கள். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு கிடைக்கும். பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் தொழில், உத்தியோக பிரச்சனைகள் சீராகும். தொழில் வியாபாரத்தில் மந்தமான நிலை இருந்தாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.

    புத்திரப்பேறில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும்.பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். தாய் வழியில் ஏற்பட்ட மனக்கவலைகள், கருத்து வேறுபாடு அகலும்.

    விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். அங்காளி பங்காளி வகையில் நிலவிய மனக்கசப்புகள் விலகும். திருமணத்தடை அகலும்.தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள். குல தெய்வத்தை வழிபடவும்.

    பூரட்டாதி 1, 2, 3:

    குருவின் பூரட்டாதி நட்சத்திரம் 1, 2, 3ம் பாதம் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டு வசந்தகாலமாக மாறும். புதிய முயற்சிகள் கைகூடும். வறுமையில் வாடியவர்களுக்கு தேவைகள் நிறைவேறும். மனநிறைவும், நிம்மதியும் அதிகரிக்கும். மருமகன் மகன் ஸ்தானத்தில் நின்று உங்கள் தேவைகளை நிறைவு செய்வார்.

    குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். அரசு வேலை முயற்சி சாதகமாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டாளிகள் பக்குவமாக நடந்து லாபத்தை அதிகரிப்பார்கள். தொட்டது துலங்கும்.வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் அல்லது வாபஸ் பெறப்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும்.

    வெளியூர், வெளிநாட்டு வேலை அல்லது குடியுரிமை பெற்று செட்டிலாவது போன்ற பலன்களை எதிர்பார்க்கலாம். கடன்காரர்களின் கெடுபிடி குறையும். வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. குடும்ப குழப்பங்கள் நீங்கி நன்மை உண்டாகும். லஷ்மி குபேரரை வழிபடவும்.

    திருமணம்:

    2ல் ராகு, 8ல் கேது கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம். மேலும் இது ஜென்மச் சனியின் காலம் என்பதால் புனர் பூ தோஷம். சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமணம் செய்வது நல்லது. காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளது.

     பரிகாரம்:

    ஜென்மச் சனி மற்றும் குடும்ப ஸ்தானத்தில் ராகு இருப்பதால் குடும்ப ஏற்படும் அசவுகரியங்களை சீராக்க திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரரை வழிபட வேண்டும்.

    கும்பம்

    சோபகிருது வருட பலன் 2023

    பொறுப்புடன் செயல்பட வேண்டும்.!

    கும்பத்தைப்போல் குணத்தில் உயர்ந்த கும்பராசியினரின் கனவுகள் நனவாக தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பிறக்கப்போகும் சோபகிருது வருட தமிழ் புத்தாண்டில் ஆண்டின் தொடக்கத்தில் வருட கிரகமான குருபகவான் திருக்கணிதபஞ்சாங்கப்படி ஏப்ரல் 22 முதல் மூன்றாமிடமான முயற்சி, சகாய ஸ்தானம் நோக்கி செல்கிறார்.

    ஜனவரி 17ல் நடந்த சனிப் பெயர்ச்சியின் படி சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். கும்ப ராசிக்கு ஜென்மச் சனியின் ஆதிக்கம் உள்ளது. தற்போது 3,9ல் சஞ்சரிக்கும் ராகு,கேதுக்கள் அக்டோபர் 30க்குப் பிறகு 2,8ம்மிடம் செல்கிறார்கள். வேலை, தொழில் மாற்றம்இடமாற்றம் கவலையைத்தரும். சுய தொழில் முதலீடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்றாலும் போதிய வருமானம் இருக்காது. கடன் தொல்லையால் மனம் கலங்க நேரும். வரவை விட செலவு பல மடங்காக அதிகரிக்கும். மனம் எதிலும் லயிக்காது.

    புதிய போட்டியாளர்களும் விரோதிகளும் உருவாகுவார்கள். பணவரவில் தடையுண்டாகும். இக்காலத்தில் அனைவரிடமும் எச்சரிக்கையுடன் பழகினால் மட்டுமே சங்கடங்களிலிருந்து தப்ப முடியும். ந்த விசயத்தையும் அவசரப்பட்டுச் செய்யாமல் அனுபவஸ்தரின் ஆலோசனை கேட்டு செய்ய வேண்டிய நேரம்.இல்லத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சு நடைபெறும்.வழக்கு விவகாரங்களில் இழுபறியான சூழல் உண்டாகும். பிள்ளைகளுக்கு சுப நிகழ்வு நடத்தி ஆனந்தமடைவீர்கள்.

    குடும்பம், பொருளாதாரம் : ஜென்மச் சனியின் காலம் என்றாலும் உழைப்பவர்களுக்கு சனி பகவான் உறுதுணையாக இருப்பார்என்பதால் கலங்க வேண்டாம். சோதனை காலத்தைசாதனை காலமாக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது.

    நாளைய வருமானத்திற்குரிய தொகை இன்றே செலவாகிவிடும். உறவுகள் உங்களை விட்டு விலகும்.மனிதனின் சட்டைப் பையில் பணம் இல்லை என்றால் முதலில் விலகுவது உறவுகளே .யார் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள் என்று நினைத்தீர்களோ அவர்கள் பாதகத்தை தருவார்கள். அவசரமான சூழ்நிலையிலும் உடனிருந்து உதவும் உறவுகளை குருவும் சனியும் அடையாளம் காண்பிக்கப் போகிறார்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வழக்கு பாதகமாகும். சிலர்பூர்வீகத்தை விட்டு வெகு தூரம் சென்று குடியேறலாம். அலைச்சல் மற்றும் விரையம் மிகுதியாக இருக்கும்.

    பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இழப்புகள் எந்த நேரத்தில் எப்படி வரும் என்று யூகம் செய்ய முடியாது.தூக்கமின்மை மிகுதியாக இருக்கும். கண்கள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். சிலருக்கு கண்ணாடி அணிய நேரும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை இருக்கும்.

    பெண்கள் : குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அடிக்கடி மங்களகரமான விசேசங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும்.பிறந்த வீட்டாரும்,புகுந்த வீட்டாரும் ஒன்றாக கலகலப்பாக பழகுவார்கள். மாமியர், மருமகள் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். ஜென்ம சனியினால் ஏற்படும் மன சஞ்சலத்தைக் குறைக்க தினமும் ஸ்ரீராம ஜெயம் எழுதவும்.

    அவிட்டம் 3, 4 : ஆன்மீக வழிபாட்டின் மூலம் மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும் காலம். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் கொண்டு செல்லாமல் தாங்களே தீர்த்துக் கொள்வதால் ஊடல் கூடலாகும். வீடு, வாகனம் போன்ற சுப செலவுகளுக்கு சகோதரியிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும்.பணியில் தேவையற்ற அலைச்சல்களால் விரயங்கள் ஏற்படலாம். நாளும் சுப பலன்களை அதிகரிக்க தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

    சதயம் : சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும் காலம். புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள். இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் கண் திருஷ்டி, போட்டி-பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். கடன் பிரச்சினைகளால் மனவருத்தங்கள் ஏற்படும். சில முக்கிய சம்பவங்கள் பாதகமாக இருப்பது போல் தோன்றினாலும் முடிவில் நன்மையாகவே இருக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் முன்பு பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். உடல் அசதி, அசவுகரியம் மற்றும் பொருள் விரயத்திலிருந்து விடுபட தினமும் துர்க்கையின் துக்க நிவாரண அஷ்டகம் கேட்கவும்.

    பூரட்டாதி 1,2,3 : எதிரிகள் தொல்லை நீங்கி நம்பிக்கையும், பலமும், தைரியமும் அதிகரிக்கும் காலம். பல்வேறு காரணங்களால் அவமானத்துடன் வாழ்ந்த நிலையில் மாற்றம் உண்டாகும்.தொழில், வேலைக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்த நிலை மாறி ஒரே இடத்திலிருந்து பணிபுரியும் நிலை உண்டாகும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் ஒப்பந்தத்தில் கவனம் தேவை.எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும்.உடன் பிறந்த இளைய சகோதரர்களிடம் வீண்விவாதங்களை தவிர்க்கவும். உங்களை வாட்டிய கடன் பிரச்சினை மற்றும் வாழ்க்கைத் துணையின் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். வளர்ப்பு பிராணிகளிடம் கவனத்துடன் செயல்படவும். உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    பரிகாரம் : கும்பராசியினர் பூலோக கைலாயம் என போற்றப்படும் மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயில் சென்று வர ஜென்மச் சனியின் பாதிப்பு குறையும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம்

    சுபகிருது வருட பலன் - 2023

    உறவுகளுக்காகவே வாழும் கும்ப ராசியினர் இந்த தமிழ் புத்தாண்டில் அடுக்கடுக்கான முன்னேற்றங்களைப் பெற நல் வாழ்த்துக்கள்.

    உங்கள் ராசிக்கு 3ல் ராகுவும் 9ல் கேதுவும் உள்ளார்கள். குருபகவான் தன ஸ்தானத்திலும், சனி பகவான் 12 மற்றும் ராசியில் சஞ்சரிக்கிறார். தன குருவால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. குடும்ப தேவைகளுக்கு மேல் உபரி வருமானம் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறமையால் உறவுகளை பாசப் பிணைப்பில் கட்டுவீர்கள்.சொல் வலிமை, வாக்குபலிதம் ஏற்படும். உங்களின் ஆலோசனைக்குஉற்றார் உறவினர்கள் செவி சாய்ப்பார்கள்.

    வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சாரும். அதை வாங்கித் தந்த பெருமை குருவைச் சாரும். எந்த செயலிலும்விரைந்து செயல்பட்டு தெளிவாக முடிவு எடுப்பீர்கள். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் காலம். தைரியம், தெம்பு , ஞாபக சக்திஅதிகரிக்கும். இது வரை அனுபவித்து வந்த சங்கடங்கள் தீரும். நன்மைகள் அதிக அளவில் நடக்கும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பிரயாணங்கள் செய்ய நேரும். முறையற்றஆவணங்களால் வம்பு , வழக்கு, பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் சொத்தை சகோதர, சகோதரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார். சிலருக்கு சொத்து தொடர்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். ஆடை ,ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.சிலர் நடக்காததை நடப்பது போல் கற்பனை செய்வார்கள். சிலருக்கு செவித்திறன் குறைபாடு வரலாம். கும்பராசியினருக்கு குருவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளதால் ஏழரைச் சனி மற்றும் ராகு/கேதுவின் தாக்கம் உங்களை பாதிக்காது.

    குடும்பம்:குடும்ப ஸ்தானாதிபதி குரு குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால்சிலர் தீய நண்பர்களின் சேர்க்கையிலிருந்து விடுபடலாம்.குடும்ப தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் பெருகும். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். சிலரின் வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். சம்பந்திகள் சண்டை முடிவுக்கு வரும். விருந்து உபசாரம் மற்றும் சுப நிகழ்வுகளால் வீடு கலகலப்பாக மாறும். தவறான புரிதலால் விலகிச் சென்ற உறவுகள் உண்மை நிலை புரிந்து மீண்டும் உறவாடுவார்கள்.மகன், மகளின் திருமணம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

    ஆரோக்கியம்: ஏழரைச் சனியின் காலம் என்பதால் கை, கால், மூட்டு வலி இருக்கும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு வைத்தியம் நல்ல பலன் தரும். குருவின் பார்வை 6, 8ம் இடத்தில் பதிவதால் மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும்குடிபுகும். ஆரோக்கியம் சிறப்படையும். ஆயுள் பலம் உண்டு. மருத்துவச் செலவு குறையும்.

    திருமணம்:2022ல் திருமணம் எந்த தடையும் இன்றி எளிமையாக நடந்து முடியும். வரன் பற்றிய மிகைப்படுத்தலான எதிர்பார்ப்பு இன்றி திருமண முயற்சி செய்வது நல்லது. நேரம், காலம் சாதகமாக இருக்கும் பொழுது சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் 2023ல் சனி கும்பத்திற்கு பெயர்ச்சியாகும் போது ஜென்மச் சனியால் திருமணத் தடை உருவாகலாம். அதிக கவனத்துடன் வரனைதேர்வு செய்ய வேண்டும். தவறானசுய விருப்ப விவாகம் தோல்வியை ஏற்படுத்தலாம்.

    பெண்கள்:திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையும் அன்னியோன்யமாக இருப்பீர்கள்.மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . வீடு ,வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.தாய் வழி உறவினர்களின்அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் மூத்தசகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வந்து சேரும்.

    மாணவர்கள்:பள்ளி, கல்லுரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ,மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். 9ம் இடத்தில் நிற்கும் கேது உங்களுக்குபுத்தி கூர்மை , தெய்வ அனுகிரகம், ஞானம்போன்றவற்றை வாரி வழங்க போகிறார். ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அரசுத் துறை சார்ந்த கல்வி வாய்ப்பும் கிடைக்கும்.

    உத்தியோகஸ்தர்கள்:தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும்.அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்.மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடையேநல்லிணக்கம் ஏற்படும்.உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். அரசு அதிகாரிகள்இடமாற்றம் செய்யப்படுவீர்கள்.

    முதலீட்டாளர்கள்:ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு இது பொற்காலம்.நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும். புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள்.

    அரசியல்வாதிகள்:பல அரசியல் பிரமுகர்களுக்கு வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு நன்மையை தரும். முக்கிய கட்சியில்இணையும் வாய்ப்பு கிட்டலாம்.பெரிய பதவிகள்கிடைக்க கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது.

    கலைஞர்கள்:தடைகள் விலகும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும். உங்கள் கனவுகளை நிறைவேற்றும் புதுப்பட வாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் வந்து குவியும்.

    விவசாயிகள்:விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான நேரம். பழைய விவசாய கடன் அல்லது வட்டி தள்ளுபடியாகும்.விளை நிலங்களில் அமோக விளைச்சல் ஏற்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும்.விவசாயிகள் புதிய தொழில் முறையில் போதிய அனுபவம் இல்லாத தொழில் முறையைபற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்தவும்.

    ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 3ல் ராகுவும் 9ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.சிலர் வெளியூர், வெளிநாட்டிற்கு வாழ்வாதாரத்திற்கு இடம் பெயரலாம். ஞாபக சக்தி குறையும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகாது என்பதால் வழக்குகளை ஒத்திப் போட வேண்டும். சிலர் சட்டச் சிக்கல் நிறைந்த சொத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். சிலர் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படலாம். அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சனை ஏற்படலாம். உயர் கல்வி முயற்சி சிறு தடைக்குப் பின் சீராகும்.

    குரு: 29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 12ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தை வழி உறவினர்களால் முன்னோர்களின் சொத்தை பிரிப்பதில் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    பரிகாரம்:வியாழக்கிழமை சித்தர்கள் வழிபாடு செய்து வர முத்தாய்பான மாற்றங்கள் தேடி வரும்.

    ஐஸ்வரியம் கிடைக்கும்

    தன குருவால் சிலரின் பேச்சுத் திறமை வருமானத்தை அதிகரிக்கும். பற்றாக்குறை வருமானம் பிள்ளைகளின் பங்களிப்பால் உபரி வருமானமாகும். வீட்டில் மகாலஷ்மி வாசம் செய்வாள். குடும்பத்திற்கு நிலையான நிரந்தமான வருமானம் கிடைக்கும். இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும்.தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். அடமானத்தில் இருந்தநகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள். கடன் தொல்லை குறையும். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×