ஆன்மிக களஞ்சியம்

உதயமானது சூரியனார் கோவில்

Published On 2024-02-01 12:34 GMT   |   Update On 2024-02-01 12:34 GMT
  • தங்களின் சாபப்பிணியை நீக்கியமையால் அவ்விநாயகர்க்கும் “கோள் வினை தீர்த்த விநாயகர்” என்று திருப்பெயர் சூட்டினர்.
  • அர்க்க வனமாக இருந்த இந்த இடத்தில் மக்கள் நடமாட்டத்தால் எருக்கங்காடு குறைந்து அழிந்தது.

பிறகு நவநாயகர்கள் காலமுனிவரை அழைத்துகொண்டு தாங்கள் தவம் செய்த இடத்தை அடைந்து அங்கே பிரதிட்டை செய்த விநாயகரை நன்றி உணர்வோடு வணங்கினர்.

தங்களின் சாபப்பிணியை நீக்கியமையால் அவ்விநாயகர்க்கும் "கோள் வினை தீர்த்த விநாயகர்" என்று திருப்பெயர் சூட்டினர்.

பிறகு காலவ முனிவரிடம் தங்களுக்கென இவ்விடத்தில் தனிக்கோவில் அமைக்கும் படி கூறி மறைந்தனர்.

காலவமுனிவர் நவநாயகரின் ஆணைப்படி அங்கே கோவில் அமைத்து நவக்கிரகப்பிரதிட்டை செய்து வழிப்பட்டார்.

தலம் தலங்களாயின

அர்க்க வனமாக இருந்த இந்த இடத்தில் மக்கள் நடமாட்டத்தால் எருக்கங்காடு குறைந்து அழிந்தது.

பிராண நாதேசுவரர் எழுந்தருளியுள்ள மேற்குப் பகுதி திருமங்கலக்குடி என்றும், நவநாயகர்கள் ஆலயம் அமைந்துள்ள வடகிழக்குப்பகுதி சூரியனார் கோவில் என்றும் பெயர் பெற்று இரண்டு தலங்களாக அமைந்தன.

Tags:    

Similar News