ஆன்மிக களஞ்சியம்

திருவிடைமருதூர் கோவில் அமைப்பு

Published On 2024-01-25 12:12 GMT   |   Update On 2024-01-25 12:12 GMT
  • இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
  • இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம்

இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும்.

இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

அஸ்வமேதப் பிரகாரம்:

இது வெளிப் பிரகாரமாகும்.

இந்தப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.

கொடுமுடிப் பிரகாரம்:

இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும்.

இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

ப்ரணவப் பிரகாரம்:

இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும்.

இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News