ஆன்மிக களஞ்சியம்

திருவாரூர் தியாகராஜர் கோவில்-மூலாதாரத்தலம்

Published On 2023-08-31 09:27 GMT   |   Update On 2023-08-31 09:27 GMT
  • திருவாரூரையும் தியாகராசர் கோவிலும் பிரித்து வரலாறே எழுத முடியாது.
  • சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று.

திருவாரூர் தியாகராஜர் கோவில்-மூலாதாரத்தலம்

பண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒரு பகுதியே திருவாரூர் வட்டமாகும்.

கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும்.

திருவாரூரையும் தியாகராசர் கோவிலும் பிரித்து வரலாறே எழுத முடியாது.

காவிரி ஆற்றின் வளமான வண்டல்பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் வட்டம்.

சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று. (மற்ற ஊர்கள்- காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர்).

ஆறு சிவத்தலை விராட புருடனின் ஆறு ஆதாரங்கள் என்று போற்றுவது சைவமரபு. அம்முறையில் திருவாரூர் மூலாதாரத்தலம்.

Tags:    

Similar News