திருப்பதி ஏழுமலையான் குமரிமுனைக்கு வந்தது எப்படி?
- திருப்பதியில் நடக்கும் உற்சவங்களில் சீனிவாச கல்யாணம் உற்சவம் மிகவும் தனித்துவம் கொண்டது.
- இந்த உற்சவம் பக்தர்களுக்கு பலன்களை வாரி வழங்கும் முக்கியத்துவம் கொண்டது.
திருப்பதியில் நடக்கும் உற்சவங்களில் சீனிவாச கல்யாணம் உற்சவம் மிகவும் தனித்துவம் கொண்டது.
இந்த உற்சவம் பக்தர்களுக்கு பலன்களை வாரி வழங்கும் முக்கியத்துவம் கொண்டது.
இதனால்தான் சீனிவாச கல்யாண உற்சவத்தில் பங்கேற்க ஒவ்வொரு பக்தரும் ஆசைப்படுவார்கள்.
ஆனால் அந்த ஆசை அவ்வளவு எளிதில் நிறைவேறுவதில்லை.
பக்தர்களின் பொருளாதார வசதி, பயண தூரம் மற்றும் பல காரணங்களால் பல லட்சம் பக்தர்கள் சீனிவாச கல்யாணத்தை நேரில் பார்க்க முடியாத நிலையில் உள்ளனர்.
அத்தகைய பக்தர்களின் மனக்குறையை தீர்க்கும் வகையில் திருப்பதி-திருமலை தேவஸ்தானம் அடிக்கடி வெளியூர்களில் சீனிவாசன் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி வருகிறது.
அந்த வகையில் கன்னியாகுமரியில் கடந்த 2010-ம் ஆண்டு சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிதான் கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உருவாவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது.