ஆன்மிக களஞ்சியம்

சிவந்த பூக்களால் பூஜிக்க வேண்டும்

Published On 2024-01-17 18:03 IST   |   Update On 2024-01-17 18:03:00 IST
  • பிற விரத நாட்களைப் போலவே ஞாயிற்றுக் கிழமையும் ஆசரிக்க வேண்டும்.
  • சூரியன் சம்பந்தமாக இந்த நாளை ஆசரிப்பதால் ஞாயிறு விரதத்தை இரவி வார விரதம் என்றழைப்பதுண்டு.

பிற விரத நாட்களைப் போலவே ஞாயிற்றுக் கிழமையும் ஆசரிக்க வேண்டும்.

ஆனாலும் சூரியனுக்கு சிவப்பு பூக்களாலும் இரத்த சந்தனத்தாலும் பூஜை நடத்த வேண்டும் என்பது விதிமுறை.

சூரியன் சம்பந்தமாக இந்த நாளை ஆசரிப்பதால் ஞாயிறு விரதத்தை இரவி வார விரதம் என்றழைப்பதுண்டு.

இந்த விரதம் இருப்பவர்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உப்பு, எண்ணை முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சூரியன் மறையும் நேரத்துக்குப்பின் உணவருந்துவதை நிறுத்தி மறுநாள் உதயம் வரை உபவாசமிருக்க வேண்டும் என்பதே ஞாயிற்றுக்கிழமை விரதத்தின் சிறப்பு.

இந்த விரதம் சரியானபடி ஆசரித்துள்ளவர் களுக்கு சரும நோய்கள் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்க்கலாம்.

Tags:    

Similar News