ஆன்மிக களஞ்சியம்

செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலங்கள்-பழனி!

Published On 2023-08-22 11:57 IST   |   Update On 2023-08-22 11:57:00 IST
  • இத்தலத்தில் முருகனை செவ்வாய் பகவன் வழிபட்டார்.
  • முதலில் சண்முகா நதி, சரவணப்பொய்கையில் நீராட வேண்டும்.

முருகனின் ஆறுபடை வீடுகளில் பழனி ஒன்றாகும். இத்தலத்தில் முருகனை செவ்வாய் பகவன் வழிபட்டார்.

பழனி முருகனை வழிபட செல்பவர்கள் முதலில் சண்முகா நதி, சரவணப்பொய்கையில் நீராட வேண்டும்.

பிறகு மலை அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட வேண்டும்.

பிறகு 450 அடி உயரத்தில் உள்ள மலையில் ஏறி போகரால் செய்து அமைக்கப்பட்ட நவபாஷான முருகனை தரிசிக்க வேண்டும்.

செவ்வாய் தோஷத்தால் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், இத்தலம் சென்று பரிகாரம் செய்யக்கூடாது.

அவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சிறுகுடி, மேலக் கடம்பூர் போன்ற தலங்களுக்கு சென்றே பரிகாரம் வழிபாடு செய்யவேண்டும்.

சாதாரண செவ்வாய் தோஷ பரிகாரத்துக்கே பழனி முருகனையும் சுவாமிமலை முருகனையும் தரிசிக்க வேண்டும்.

திருமண தோஷத்திற்கு மட்டும் செல்ல கூடாது இதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.



Tags:    

Similar News