ஆன்மிக களஞ்சியம்

சகல பாக்கியங்கள் அருளும் சுக்கிரவார விரதம்

Published On 2023-10-28 17:28 IST   |   Update On 2023-10-28 17:28:00 IST
  • அம்பாளைப் பற்றிய பாராயணம், கதைகள் ஆகியவற்றைப் படிக்க வேண்டும்.
  • அம்பாளைப் பற்றிய பாராயணம், கதைகள் ஆகியவற்றைப் படிக்க வேண்டும். .

சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் சுக்கிர வாரம் தொடங்கி (வெள்ளிக்கிழமை) பிரதி சுக்கிர வாரமும்

உமா தேவியாரை முன்னிட்டு அனுஷ்டிக்கும் விரதம் சுக்கிர வார விரதம் எனப்படும்.

இதை வெள்ளிக்கிழமை விரதம் என்றும் அழைப்பார்கள்.

இவ்விரத தினங்களில் ஒரு பொழுது பகலில் உணவு உட்கொள்ள வேண்டும்.

அம்பாளைப் பற்றிய பாராயணம், கதைகள் ஆகியவற்றைப் படிக்க வேண்டும்.

மாலைப்பொழுதில் இல்லத்தில் அம்பாள் படத்தின் முன் குத்து விளக்கை ஏற்றி வைத்து பூசிக்கலாம்.

கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து அம்பாளை வழிபடலாம்.

தேவிக்கு விளக்கு ஏற்றும்பொழுது ஐந்து வகை எண்ணெயை ஊற்றி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.

அம்பாளை வழிபட்டு சுக்கிர வார விரதம் மேற்கொள்ளுவதால் சகல பாக்கியங்களும் ஏற்படும்.

Tags:    

Similar News