ஆன்மிக களஞ்சியம்
புரட்டாசியை பெருமாள் மாதம் என அழைக்க காரணம்
- புரட்டாசி மாதத்தில் தான் கன்னியில் சூரியன் வந்து அமர்கிறார்.
- புதனுக்கு வெகு நட்பு கிரகமாக சனி பகவான் உள்ளார்.
பெருமாளுடைய அம்சம் என்று சொல்லக்கூடிய கிரகம் புதன்.
அந்த புதனுடைய வீடு கன்னி.
இந்தக் கன்னியில்தான் புதன் ஆட்சியும் அடைகிறார், உச்சமும் அடைகிறார்.
ஒரு கிரகம் ஒரே வீட்டில் ஆட்சியடைவதும், உச்சமடைவதும் மிகவும் அரிதான ஒரு விஷயம்.
அந்தப் பெருமை கன்னிக்கு உண்டு.
பெருமாளுடைய அம்சமாக கருதக்கூடிய புதனுடைய வீடு கன்னி.
புரட்டாசி மாதத்தில் தான் கன்னியில் சூரியன் வந்து அமர்கிறார்.
ஆகவே தான் இந்த மாதத்தில் திருமாலுக்கு வேண்டிய பஜனைகள், பிரம்மோற்சவங்கள் என்று அனைத்தும் நடைபெறுகிறது.
எனவே, புதனின் அம்சமாக பெருமாள் இருப்பதால் புரட்டாசி மாதத்தை பெருமாளுக்கான மாதமாகக் குறிப்பிடுகிறார்கள்.
புதனுக்கு வெகு நட்பு கிரகமாக சனி பகவான் உள்ளார்.
அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.