ஆன்மிக களஞ்சியம்

பிணிகளை அகற்றும் சாய்பாபாவின் உதி

Published On 2023-11-27 13:30 GMT   |   Update On 2023-11-27 13:30 GMT
  • பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும், பொறுமையும் ஆகும்.
  • அவர் மேல் நம்பிக்கை வைத்து நம் வேண்டுதலை சொன்னால், பாபா அதை நிறைவேற்றி வைப்பார்.

துவாரகாமாயீயில் சாய்பாபாவால் ஏற்றி வைத்த அக்னி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

அதில் விறகுக்கட்டை போட்டு எரித்து கொண்டிருந்தார்.

அதன்முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம்.

தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து "உதி" என்று அழைக்கப்படும்

விபூதியை எடுத்து தருவார். அக்னி குண்டத்தை எடுக்கும்போது வேண்டுமானால் அது சாம்பலாக இருக்கலாம்.

பகவான் சாயியின் ஸ்பரிசம் பெற்ற பிறகு இந்த உதி மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது.

எல்லாவித ஊழ்வினைகளையும், வியாதிகளையும் போக்க வல்லது.

தினமும் குளித்தபின் உதியை நெற்றியில் இட்டு கொண்டு, கொஞ்சம் நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் நோய் நிவாரணம் தரும்.

பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும், பொறுமையும் ஆகும்.

அவர் மேல் நம்பிக்கை வைத்து நம் வேண்டுதலை சொன்னால், பாபா அதை நிறைவேற்றி வைப்பார்.

சாய்பாபா என்னும் மந்திர சொல்

இந்த மந்திரச்சொல்லின் "சாய்" என்ற சொல்லுக்கு, "சாட்சாத் கடவுள்" என்ற அர்த்தமாம்.

இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர்.

Tags:    

Similar News