ஆன்மிக களஞ்சியம்

பல்லக்கு வாகனமும் தேர்த்திருவிழாவும்

Published On 2023-12-07 12:28 GMT   |   Update On 2023-12-07 12:28 GMT
  • இறைவன் விழாக் காலங்களில் பல்லக்கில் எழுந்தருளும் காட்சி ‘திரோபவக் கோலம்‘ எனப்படுகிறது.
  • தேர்த் திருவிழா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.

இறைவன் விழாக் காலங்களில் பல்லக்கில் எழுந்தருளும் காட்சி 'திரோபவக் கோலம்' எனப்படுகிறது.

திரோபவம் என்றால் மறைத்தல் என்று பொருள்.

உயிர்கள் பூமியில் வாழ்கின்ற காலத்தில் அறிந்தோ அறியாமலோ வினைகளை செய்கின்றன.

இவ்வாறாகப் பிறவி தோறும் அவை செய்த நன்மை தீமைகளின் அடிப்படையில் இறைவன் அருள்புரிகின்றான்.

மறைப்பு நிலையாக இருந்து இறைவன் அடைவதற்கு அரியவன் என்னும் தத்துவத்தை பல்லக்கு வாகனம் உணர்த்துகின்றது.

தேர்த் திருவிழா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.

தேரோட்டம் ஏன் திருவிழாக்களில் நடைபெறுகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

இத் திருவிழாவின்போது தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மக்களுக்கு ஆசீர் வழங்க இறைவனின் திருவருள் எனக் கூறலாம்.

தேர்த் திருவிழா பார்க்கும் ஒவ்வொருவர் மனத்திலும் ஏழுவகைப் பிறப்பையும் மாய மல குணம்

ஏழும் நீக்கப் பெறுவதில் உட்கருத்தே ஏழாம் திருவிழாவாகும்.

மேலும் எந்தத் திருக்கோவிலிலும் இல்லாத பஞ்ச மூர்த்திகளின் திருத்தேரோட்டம் ஒரே நாளில்

நடைபெறுவது இத்திருத்திலத்திற்கு சிறப்பாகும்.

முப்புரம் ஆணவம், கன்மம், மாயை மூன்று அசுரர்கள் - தாருதாக்கன், கமலாக்கன், வித்யூன்மா,

மூவகை ஆன்மாக்கள்- விஞ்ஞானாகலர், பிரனாயகலர், சகலர்.

பரம்பொருளாகிய சிவபெருமானே ஆன்மாக்கட்கு மும்மல பந்த வாதனைகளை நீக்கி

பேரானந்தப் பெருவாழ்வளிப்பவர் என்ற உட்பொருளைத் தேர்திருவிழா விளக்குகிறது.

Tags:    

Similar News