ஆன்மிக களஞ்சியம்

நாரதர் நடத்திய யாகம்

Published On 2023-12-16 12:46 GMT   |   Update On 2023-12-16 12:46 GMT
  • நான்முகக் கடவுள் ஓர் யாகம் செய்து பரமனின் அருள்பெற எண்ணினார்.
  • கயிலை நாதனும் காட்சி தந்து வேண்டிய வரம் அருளினார்.

நான்முகக் கடவுள் ஓர் யாகம் செய்து பரமனின் அருள்பெற எண்ணினார்.

வாக்தேவியான கலைமகளும் பிரம்மனும் தற்போதுள்ள சுருட்டபள்ளிக்கு மேற்கே ஒரு மலை பிரதேசத்தை அடைந்தனர்.

சரஸ்வதி தேவி மலையில் இயற்கை அழகை கண்டு ரசித்து வெகுதூரம் சென்றுவிட்டாள்.

பிரம்மன் செய்ய வேண்டிய நல்ல வேளை நெருங்கிவிட்டது.

கலைமகள் அருகில் இல்லை. அதனால் உரத்த குரலில் கூவி அழைத்தும் கலைமகள் வரவில்லை.

அதனால் சரஸ்வதி தேவியை தர்ப்பையில் ஆவாஹனம் செய்து அக்னியை மூட்ட ஆயத்தமானார்.

இந்த விஷயம் கலைமகளின் நினைவிற்கு நினைவில் வந்தது.

உடனே சூஷ்ம சரீரத்தில் அரணி என்னும் கட்டையில் புகுந்தாள்.

அக்னிமூட்டி தொடங்கிய வேள்வியில் இருந்து நீர் பாயத்துவங்கியது.

இதைக்கண்ட தேவர்களும், முனிவர்களும் அதிசயம் அடைந்தனர்.

கலைவாணி நான்முகன் காலில் விழுந்து, சுவாமி, தங்களுக்கு உண்டாகும் சினம் தணிவதற்காகவே தண்ணீராக உருவெடுத்ததாக கூறி மன்னித்தருளும்படி வேண்டினாள்.

அனைவரும் இதனை ஈஸ்வரனின் விருப்பம் என்று எண்ணினர்.

கயிலை நாதனும் காட்சி தந்து வேண்டிய வரம் அருளினார்.

Tags:    

Similar News