ஆன்மிக களஞ்சியம்
null

கோனியம்மன் ஆலயம் வசந்த உற்சவம்

Published On 2023-10-16 13:00 GMT   |   Update On 2023-10-17 05:27 GMT
  • வசந்த விழாவுடன் மாசிமாத தேர்த்திருவிழா என்னும் பெருந்திருவிழா நிறைவு எய்துகின்றது.
  • அந்நாள் யாவர்க்கும் மகிழ்ச்சி நிறைந்த இன்ப நாளாகும்.

வசந்த உற்சவத்தில் திருக்கோவிலுக்குள் உற்சவரை புறப்பாடு செய்வித்து வசந்த மண்டபத்தில் அம்மனை எழச்செய்து வணங்கி மகிழ்வர்.

வசந்த விழாவுடன் மாசிமாத தேர்த்திருவிழா என்னும் பெருந்திருவிழா நிறைவு எய்துகின்றது.

திருவிழா நாட்களில் நாள்தோறும் பக்தி சொற்பொழிவுகளும் இன்னிசை கச்சேரிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

மேற்கண்ட திருவிழா நாட்களில் ஊரெங்கும் உள்ள வீடுகள் அனைத்தும் சுண்ணாம்பு பூசி சாணமிட்டு மொழுகி கோலமிட்டு,

வண்ணம் பூசி, ஒப்பனை செய்து, ஆடவர், மகளிர், குழந்தைகள் அனைவரும் கோவிலுக்கு வந்து

கோனியம்மனை தரிசித்து கொண்டாடுவார்கள்.

அந்நாள் யாவர்க்கும் மகிழ்ச்சி நிறைந்த இன்ப நாளாகும்.

பல்பகையாலும் பாரித்தும் பூரித்து நனி சிறந்தும், நாகரிகத்தின் நல்லுறைவிடம் என நல்லோரால் நாமணக்க புகழ்ந்து பேசப்படுகின்ற,

நமது கோவன்புத்தூரில் காப்பு தெய்வமென்றும், கிராம தேவதை என்றும், கோவை அரசி என்றும் கூறப்படுகின்ற,

கோனியம்மனால் கோவன்புத்தூருக்கும் அதனுள் உறையும் மக்களும் மாண்புடன் வாழ்கின்றனர் என்றால்

அது தெய்வத்தின் அருட்கருணை என்று தான் கூறுதல் வேண்டும்.

Tags:    

Similar News