ஆன்மிக களஞ்சியம்
null

கோனியம்மன் ஆலயம்

Published On 2023-10-16 11:48 GMT   |   Update On 2023-10-17 05:45 GMT
  • கோவை மாநகரின் மையமாகவும் கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
  • கோவை நகரத்தில் உள்ள சிவாலயம் கோனியம்மன் ஆலயத்திற்கு தெற்கிலே உள்ளது.

வளமையும், பெருமையும் மிக்க கோவை மாநகரில் கோட்டை ஈசுவரன் கோவில், பேட்டை ஈஸ்வரன் கோவில் என்ற

இரண்டு சிவாலயங்களுக்கு மத்தியில் பழம் பெருமையுடன் விளங்குவது அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில்.

3 கோவில்கள் 3 கண் போலவும் அதில் கோனியம்மன் திருக்கோவில் நடுவில் உள்ள நெற்றிக்கண் போலவும் அமைந்துள்ளது.

கோவை மாநகரின் மையமாகவும் கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

கோவை மாநகரின் தனிப்பெரும் அரசியாக கோனியம்மன் விளங்கி தன்னை வணங்குவார்க்கு தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வரியா மனந்தரும் என்ற அபிராமி அந்ததி கூறும் முறையில் திருவருட்செல்வம் வழங்கி வருகின்றாள்.

கோவை மாநகரின் தனிப்பெரும் அரசியாகவும், காவல் கடவுளாகவும், வணங்கி வழிபாடு செய்வோர்க்கு அருளும்,

திருவருட் சக்தியாகவும், சாந்தி துர்க்கா பரமேஸ்வரியாகவும்

கோனியம்மன் திருவருட் பொலிவுடன் விளங்குகின்றாள்.

சைவாகம விதிப்படி தமிழகம் முழுக்க எந்த சிவாலயம் எடுப்பித்தாலும் அதன் வடவெல்லை காவல் தெய்வம்

காளி அல்லது கொற்றவை அல்லது பிடாரியேயாகும்.

இப்பெண் தெய்வம் அன்னை பராசக்தியின் கோப சக்தியான ஒரு கூறு என நூல்கள் கூறும்.

அக்கூறே உலக உருண்டைகளை பந்தாக விளையாடும் ஆற்றலை இறைவியிடம் பெற்றது என்றால்

அன்னை பராசக்தியின் பெருமையும் ஆற்றலும் உயிர்களால் அளவிட முடியுமா?

மேற்கு காவல் தெய்வம் மகாவிஷ்ணுவே, கிழக்கிற் பெரும்பாலும் நேர்பார்வையாதலின் கணேசரோடு விளங்குவது வழக்கமாகும்.

இவ்வாறுள்ள சைவாகம விதிப்படி அமைந்த துர்க்கா தேவியே நம் கோனியம்மையாகும்.

கோவை நகரத்தில் உள்ள சிவாலயம் கோனியம்மன் ஆலயத்திற்கு தெற்கிலே உள்ளது.

கோட்டை ஈசுவரன் ஆலயம் தான் அது.

அவ்வாலயத்து இறைவன் சங்கமேஸ்வரர், அம்மை அகிலாண்டேஸ்வரி.

தெற்கு காவல் தெய்வம் மகாசாஸ்தா ஆவார்.

சிவபிரானின் புருஷ சக்தியாகிய திருமால் மோகினியாகிய பெண்ணரசியாக நின்றபோது இறைவன் பேரழகில்

தம் நெஞ்சை பறிகொடுத்து பெற்ற பிள்ளையாகிய மஹாசாஸ்தாவே ஐயப்பன் ஆவர்.

இதற்கு ஆதாரம் சுந்தரபுராணம் மகாசாத்துப்படலம்.


Tags:    

Similar News