ஆன்மிக களஞ்சியம்
null

கோனியம்மன் ஆலய துர்க்கை வழிபாடு

Published On 2023-10-16 13:14 GMT   |   Update On 2023-10-17 05:49 GMT
  • துர்க்கைக்கு செவ்வரளி மாலை கட்டிபோட்டு வழிபடுகின்றனர்.
  • திருமண சடங்குகளில் மிகவும் முக்கியமானது நிச்சயத்தார்த்தம் ஆகும்.

    

துர்க்கை வழிபாடு என்பது தற்பொழுது எல்லா தலங்களிலுமே நடைபெற்று வருகின்றது.

ஆனால் கோனியம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது.

செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் ராகு காலத்தில் ஆதிகோனியம்மன் சன்னதிக்கு பக்கத்தில் உள்ள மேடையில் எலுமிச்சம் பழத்தில் விளக்கு வைத்து வழிபடுவர்.

திருமண தடைகள், காரிய தடைகள், தொழிலில் நஷ்டம், உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்கள் நோய் தீர்க்க

வேண்டியும் 48 வாரம், 18 வாரம், 9 வாரம் போன்ற கணக்குகள் வைத்து,

துர்க்கைக்கு செவ்வரளி மாலை கட்டிபோட்டு வழிபடுகின்றனர்.

அவர்கள் நினைத்த வாரம் வரை வந்து விட்டு, இறுதியில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும்,

திருமண தடைகளுக்காக வேண்டியவர் அம்மனுக்கு பொட்டு மாங்கல்யம் செய்து அம்மன் கழுத்தில் அணிவித்து

அதை காணிக்கையாக செலுத்துவர்.

உடல்நிலை சரியில்லாதவர்கள் வெள்ளியாலேயோ அல்லது அதுபோன்ற வேறு உலோகத்தாலேயோ

செய்யப்பட்ட கண்ணடக்கம், கை, கால் போன்றவை வாங்கி பூஜை செய்துபின் அதை காணிக்கையாக செலுத்துவர்.

சிலர் மண்ணால் பொம்மை செய்தும் வைப்பர்.

காரியத்தடை ஏற்படுபவர்கள் பல தானங்களை செய்கின்றனர்.

இவ்வாறு செய்வதனால் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த வேண்டுதல் உள்ளூர் மக்கள் மட்டும் வேண்டுவது இல்லை.

வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பம்பாய், கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் இருந்தும்,

கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் வந்து வேண்டுதல் செய்கின்றனர்.

மேலும் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் கோனியம்மனுக்கு தீவிர பக்தர்கள் உண்டு.

அவர்கள் வேண்டுதலுக்கு காணிக்கைகளை அஞ்சலில் அனுப்புவதும் உண்டு.

உப்பு மஞ்சள் வாங்குதல்

திருமண சடங்குகளில் மிகவும் முக்கியமானது நிச்சயத்தார்த்தம் ஆகும்.

கோவை மக்கள் பெரும்பாலும் உப்புக்கூடை மாற்றி கொள்ளுவதன் மூலமாக தான் திருமணத்தை உறுதிப்படுத்துகின்றனர்.

இன்றைய தினத்தில் கோவையை பொறுத்த வரையில் உப்பு மஞ்சள் வாங்குதல் என்றாலே கோனியம்மன் கோவில்தான்

என்று சொல்லும் அளவிற்கு இங்கு தான் முகூர்த்த நாட்களில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் இருவரும்

தங்கள் சுற்றத்தாருடன் ஒன்று கூடி அம்மனுக்கு அபிஷேகம் செய்து அலங்கரித்து உப்புக்கூடைகளை மாற்றி

தங்கள் இல்லத்திருமண பந்த நிகழ்வினை உறுதிப்படுத்தி செல்கின்றனர்.

Tags:    

Similar News