ஆன்மிக களஞ்சியம்

கோமாதா பூஜை செய்யும் முறை

Published On 2023-12-24 16:19 IST   |   Update On 2023-12-24 16:19:00 IST
  • பசுவை வலம் வந்து வணங்கி மங்களப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.
  • பூஜை முடிந்தவுடன் பசுமாடு விரும்பும் ஆகாரத்தை நிறைய வைத்து திருப்தி செய்ய வேண்டும்.

கன்று ஈன்ற பசுவை நன்றாக குளிப்பாட்டி, மஞ்சளால் துடைத்து குங்குமம், சந்தனம் வைத்து மாலை சூட்டி,

அதன் மீது ஒரு வஸ்திரம் சாற்றி, தூப தீபம் காட்டி, நிவேதனம் செய்து அதன் முன் மஞ்சள் கயிறு, வெற்றிலைப் பாக்கு,

குங்குமம், விரலி மஞ்சள், எலுமிச்சம் பழம், தேங்காய் முதலான மங்களப் பொருட்களை வைத்து பூஜிக்க வேண்டும்.

பசுவை வலம் வந்து வணங்கி மங்களப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.

பூஜை முடிந்தவுடன் பசுமாடு விரும்பும் ஆகாரத்தை நிறைய வைத்து திருப்தி செய்ய வேண்டும்.

அவரவர் விருப்பம்போல கோமாதாவை முப்பெரும் தேவியாக பாவனை செய்து 108, 1008 போற்றித் துதிகளை உச்சரித்தும் வழிபடலாம்.

Tags:    

Similar News