ஆன்மிக களஞ்சியம்

சென்னையில் குரு தலம்

Published On 2023-08-09 10:01 GMT   |   Update On 2023-08-09 10:01 GMT
  • சீதையை தேடிவந்த ராமர் போரூரில் நெல்லி மரத்தடியில் அமர்ந்தார்.
  • ராமர் சிவனை கட்டித்தழுவி அமிர்தலிங்கமாக மாற்றினார்.

சென்னை போரூரில் குரு பகவானுக்கு என்று ஒரு ஆலயம் உள்ளது. இத்தலத்து மூலவர் பெயர் ஸ்ரீராமநாதஸ்வரர்.

இத்தலத்தின் வரலாறு வருமாறு:-

சீதையை தேடிவந்த ராமர் போரூரில் நெல்லி மரத்தடியில் அமர்ந்தார். ஞான திருஸ்டியால் பூமிக்கடியில் லிங்கம் இருப்பதையும், அதன் சிரசில் தன் கால்பட்டு தோசம் பெற்றதையும் உணர்ந்து, ஒரு மண்டலம் தவம் செய்தார். அத்தவத்தால் மகிழ்ந்த சிவன் பூமியை பிளந்து கொண்டு வெளிவந்தார். ராமர் அச்சிவனை கட்டித்தழுவி அமிர்தலிங்கமாக மாற்றினார்.

ராமநாத ஈசுவரர் எனவும் பெயரிட்டார். பின்னர் சிவனிடம் சீதை இருக்கும் இடத்தை கேட்டு அறிந்து இங்கிருந்து போருக்குப் புறப்பட்டதால் இவ்வூருக்கு 'போரூர் 'எனப் பெயர் வந்தது.

ராமருக்கு குருவாக விளங்கியதால் இங்குள்ள சிவன், குரு அம்சமாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பு. எனவே இத்தலம் குரு-தட்சிணா மூர்த்தி தலமாக விளங்குகிறது. தட்சிணா மூர்த்திக்கு செய்ய வேண்டிய பரிகார பூஜை அனைத்தும் சிவனுக்கே நடைபெறுகிறது. தலவிருட்சம் 'நெல்லி மரம்' விசேசமான ஒன்றாகும்.

Tags:    

Similar News