ஆன்மிக களஞ்சியம்

ஏகாதசியன்று செய்யக்கூடாதது

Published On 2023-12-20 17:22 IST   |   Update On 2023-12-20 17:22:00 IST
  • அன்று கோவில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது.
  • கூடுமான வரை கோவில்களில் பிரசாதம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள்துவாதசியன்று நடத்த வேண்டும்.

அன்று கோவில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது.

கூடுமான வரை கோவில்களில் பிரசாதம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்.

ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான்.

இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது.

தேவையானதை முதல்நாளே பறித்து வைத்துவிட வேண்டும்.

Tags:    

Similar News