ஆன்மிக களஞ்சியம்

ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

Published On 2023-12-20 17:21 IST   |   Update On 2023-12-20 17:21:00 IST
  • மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
  • ஏகாதசி என்ற சொல்லுக்கு பதினோராம் தினம் என்று பொருள்.

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாக கொண்டாட ஏற்பாடு செய்தார்.

ஏகாதசி என்ற சொல்லுக்கு பதினோராம் தினம் என்று பொருள்.

ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், மனம் அனைத்தையும் பெருமாளுடன் ஐக்கியப் படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம்.

உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி) இருக்க வேண்டும்.

குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை.

ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும்.

ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும்.

பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

Tags:    

Similar News